தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 இல் நடத்தியிருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் மக்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறுகிறது.
இந்த 2 நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் தமிழ்நாடு இக்கூட்டத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னிலையில் தமிழக அரசு செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கையை வெளியிட உள்ளது.

இது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க திட்டமிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரிய ஈர்ப்பு சக்தியாக விளங்கும். தமிழ்நாட்டில் பறந்து விரிந்து இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தளத்திற்கு செமிகண்டக்டர் தொழிற்சாலை மிகவும் முக்கியமானது, இதன் காரணமாகவே தமிழ்நாடு அரசு புதிய கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டுன் போட்டிப்போடும் குஜராத் அரசு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உள்ள செமிகண்டக்டர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், அதன் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாடு அடுத்த வாரம் நடத்துகிறது. இதன் வாயிலாக இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த மாபெரும் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு முன்னதாகவே குஜராத் மாநில அரசு 58 நிறுவனங்களுடன் 86 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் தமிழ்நாடும், குஜராத் மாநிலமும் நேருக்கு நேர் போட்டிப்போட உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications