கொரோனா வைரஸ், மனிதர்களின் பொருளாதார வாழ்கையையும், உடல் நலத்தையும் மட்டும் பாதிக்கவில்லை.
அதோடு, மன நிலையையும் கடுமையாக பாதித்து இருக்கிறது. இந்த மன அழுத்தப் பிரச்சனைக்கு சாமானியர்கள் தொடங்கி பாலிவுட் பிரபலங்கள் வரை யாருமே விதி விலக்கல்ல.
சமீபத்தில் ஒரு வியாபாரி, தன் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என தன்னைத் தானே மாய்த்துக் கொண்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது.
யார் அவர்
கெளரவ் பன்சால், வயது 40, கிழக்கு டெல்லி ஐபி விரிவாக்கப் பகுதியில் வசித்து வந்தார். வியாபாரம் தான் தொழில். கெளரவ் பன்சாலின் வியாபாரம் அவர் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே பெருத்த நஷ்டம். போதாக்குறைக்கு கொரோனா லாக் டவுன் என்பதால் வியாபாரம் நடந்திருபப்தே சிரமம் தானே. அதன் பிறகு தான லாபம் எல்லாம்.
அதிக கடன்
அதோடு பல வட்டிக் கடைக்காரர்களிடம் இருந்து, அதிக வட்டிக்கு பயங்கரமாக கடனும் வாங்கி இருந்தாராம். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையாம். கெளரவ் பன்சாலின் மனைவி ஒரு எல் ஐ சி ஏஜெண்ட். எனவே கெளரவ் பன்சால் கூட எல் ஐ சி பாலிசிகளை எல்லாம் விற்று இருக்கிறாராம்.
குடும்பத்துக்கு பணம்
வியாபாரம் எதிர்பார்த்தது போல் போகவில்லை, நிறைய கடன் என பல பிரச்சனைகள். ஆனால் அவர் பெயரில் ஏதோ லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி இருந்து இருக்கிறதாம். இந்த பாலிசியில் இருந்து வரும் 1 கோடி ரூபாய் பணம் தன் குடும்பத்துக்கு போய்ச் சேரும் எனத் தெரிந்து வைத்திருக்கிறார்.
மரண பயம்
தான் இறந்தால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால், தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள வழி தேடி இருக்கிறார். தற்கொலை செய்து கொள்ள தைரியம் வரவில்லை. எனவே நான்கு பேரை தயார் செய்து தன்னைத் தானே கொல்லச் சொல்லி இருக்கிறார் கெளரவ் பன்சால். தன்னைக் கொல்வதற்காக, அந்த நான்கு பேருக்கு 90,000 ரூபாய் பணமும் கொடுத்து இருக்கிறாராம்.
கொலை
அந்த நான்கு பேரும் டெல்லியில் மோகன் கார்டன் பகுதியில், கெளரவ் பன்சாலை கொலை செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். ஜூன் 09-ம் தேதி, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என கெளரவ் பன்சாலின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். காவலர்களும் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
டெல்லி புறகநகர் பகுதி
அடுத்த நாள் ஜூன் 10-ம் தேதி தான், கெளரவ் பன்சாலின் உடல், டெல்லி புற நகர் பகுதியில் கிடைத்தது. கெளரவ் பன்சால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தான் கருதினார்கள். சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரித்த போது தான், கெளரவ் பன்சால் தன்னைக் கொல்ல தானே ஆட்களைத் தயார் செய்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications