இந்தியாவில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்தாலும், பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தக்காளி விளைச்சல் குறைந்து சப்ளை டிமாண்ட் காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தக்காளி விலை உயர்வின் காரணமாக நாடு முழுவதும் மக்களுக்கு தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதனால் பிரியாணி சாப்பிடுவதை விட தக்காளி சட்னி சாப்பிடுபவர்கள் கெத்து என மீம் எல்லாம் பறக்கிறது. தக்காளி விலை உயர்வு குறித்து பலர் கிண்டல் செய்தாலும் மக்களின் பர்ஸ்-ல் ஓட்டைபோட்டு நிதி சுமையை மக்கள் தலையில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சில நகரங்களில், மிகவும் அத்தியாவசியமான தக்காளி-யின் விலை ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் மக்கள் தக்காளி விலையை ஒரு லிட்டர் பெட்ரோலை விட அதிகம், 2 கிராம் வெள்ளி விலையை விட அதிகம் என கணக்குப்போட துவங்கியுள்ளனர்.
இந்த விலை அதிரடி உயர்வு பொது மக்கள் மத்தியில் உண்மையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த விலை உயர்வு பருவகால மாற்றத்தால் ஏற்பட்டது என்றும் அடுத்த 15 நாட்களுக்குள் விலை சரிந்து நிலைமை மாறும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக விசாகப்பட்டினத்தில் தக்காளி ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தக்காளி மட்டும் அல்லாமல் இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ் என பல காய்கறிகள் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் தக்காளி ஒரு கிலோ 160 ரூபாயை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் சிலிகுரியில் கிலோ ₹155 ஆகவும், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் 150 ரூபாயாகவும், டெல்லி-யில் 110 ரூபாய், கொல்கத்தா 148 ரூபாய் ஆக உள்ளது.
சென்னை-யில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பில் இருந்தே பெங்களூரில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டியது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications