இந்தியாவில் அனைத்து சமையல்களுக்கும் தக்காளி பயன்படுத்தப்படும். அப்படிப்பட்ட தக்காளி சில மாதங்களாக மக்களை திக்கு முக்காடச் செய்துவிட்டது. மிக நீண்ட காலத்துக்கு முன்பு, இந்திய சமையலறைகளின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான தக்காளி, நாடு முழுவதும் ஒரு கிலோ 200-250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மே மற்றும் ஜூன் மாதங்களில் தக்காளி பயிரிடும் முக்கிய மாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய மற்றும் விநியோகச் சங்கிலியை சீர்குலைத்த பருவமழை காரணமாக விலைகள் இதுவரை இல்லாத அளவு உயரத்துக்கு தள்ளப்பட்டன.

இது மில்லியன் கணக்கான இந்தியர்களின் பர்ஸைகளை பதம் பார்த்துவிட்டது.
கிரிசில் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ் அறிக்கையின்படி, தக்காளியின் விலை கடந்த ஆண்டை விட ஆகஸ்ட் மாதத்தில் சைவ சாப்பாடு விலையை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால் உச்சக்கட்டத்தின் போது தக்காளி பயிர்களை அறுவடை செய்த விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டினர், மேலும் சிலர் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகவும் ஆனார்கள். இந்த கதைகள் அனைத்தும் இப்போது பெரும்பாலான விவசாயிகளுக்கு தொலைதூர கனவாக ஒலிக்கிறது, ஏனெனில் அவர்கள் மீண்டும் தங்கள் தக்காளியை லாபத்தில் விற்க போராடுகிறார்கள்.
கடந்த சில வாரங்களில், சப்ளை செயின் மேம்பட்டு, இந்தியா முழுவதும் தக்காளி அதிகளவில் சந்தைகளை வந்தடைந்ததால், சில மாதங்களுக்கு முன்பு விண்ணை முட்டும் அளவு இருந்த விலை இப்போது சரிந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள காய்கறி சந்தைகளில் தற்போது தக்காளி ஒரு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது, இது ஜூன் மற்றும் ஜூலை மாத விலையில் பத்தில் ஒரு பங்கு. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன், கிலோ, 180 - 200 ரூபாய் வரை விற்பனை செய்து வந்த விவசாயிகளுக்கு, தற்போது, ஒரு கிலோ தக்காளி, 3 முதல், 4 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது வேதனையளிக்கிறது.
இந்த விலை சரிவு விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில், புதிய அறுவடை நடந்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பொருட்களின் விநியோகம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மேம்பட்டுள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது அவற்றின் விலையில் கடுமையான சரிவுக்கு வழிவகுத்தது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மற்றும் நந்தியால் மாவட்ட விவசாயிகள், மொத்த சந்தையில் தக்காளியின் விலை கிலோவுக்கு 3 ரூபாய்க்கு சரிந்ததால், சாலைகளில் கொட்டி வருகின்றனர். வியாழக்கிழமை நந்தியால் மாவட்டத்தில் உள்ள பியாபிலி சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.3 ஆக குறைந்தது.
தக்காளியை இவ்வளவு குறைந்த விலைக்கு விற்பதால், கூலி மற்றும் போக்குவரத்து கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை உணர்ந்த விவசாயிகள், கிராமங்களில் உள்ள சாலைகளிலோ, திறந்த வெளியிலோ கொட்டிவிட்டனர்.
தோன் தேசிய நெடுஞ்சாலை அருகே நூற்றுக்கணக்கான டன் தக்காளியை விவசாயிகள் வீசினர். தக்காளி குவியல்களை கால்நடைகள் சாப்பிடுகின்றன.
அடுத்த சில வாரங்களில் உற்பத்தி மற்றும் வரத்து அதிகரிக்கும் நிலையில், விலை மேலும் வீழ்ச்சியடையும், அறுவடை கூட தங்களுக்கு சாத்தியமில்லாததாகிவிடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications