இந்திய உணவில் தக்காளி இல்லாத உணவு வகைகள் குறைவு. ரசம் வைப்பதற்கு கூட தக்காளி தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் தென் மாநிலங்களில் நீடித்த மழையின் காரணமாக அக்டோபர் மாதம் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் நவம்பர் மாதம் இந்தியாவில் தக்காளியின் சராசரி விலை 22 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி நிலவரப்படி தக்காளி விலை கிலோவுக்கு ரூ.52.35 ரூபாய்க்கு விற்பனையானது. அக்டோபர் 14-ஆம் தேதி அன்று ரூ.67.50 ரூபாயாக இருந்தது என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் தொடர்ந்து சில்லறை பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்திற்கு அமைத்த வரம்பான 2 முதல் 6 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்த பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் உணவு பொருட்களின் விலை உயர்வு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் பருவமழையின் காரணமாக பயிர் விளைச்சல் கடுமையாக பாதித்திருந்தது. இதன் காரணமாக அப்போது பணவீக்கம் அதிகரித்து காய்கறிகளின் விலை உயர்ந்தது. அதேபோல இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும் பருவமழையின் தாக்கத்தால் பயிர்களின் வரத்து குறைந்துள்ளது.
ஆனால் அக்டோபர் மாதத்தில் விற்கப்பட்ட தக்காளியின் விலையை விட இந்த மாதம் விலை குறைந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேச பகுதிகளில் இருந்தும் பருவகால வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆந்திரா மாநிலத்தின் மதனப்பள்ளி மற்றும் கர்நாடகாவின் கோலாரில் உள்ள முக்கிய தக்காளி கிடங்குகள் மூலம் நாடு முழுவதும் தக்காளி விநியோகிக்கப்படுகிறது.
மேலும் இந்த மாதம் தக்காளி வரத்து அதிகரித்ததால் நாடு முழுவதும் உள்ள மண்டிகளில் தக்காளியின் விலை சரிந்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மண்டியில் தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்து குவிண்டால் ஒன்று ரூ.2969 என்ற விலையில் விற்பனையாகிறது. இது முன்பு 5,883 ரூபாயாக இருந்தது.
2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டில் தக்காளியின் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக மழை பொழிவானாலும் சரி அதிக வெப்பமானாலும் சரி அவற்றை எதிர்த்துப் போராடக் கூடியதாக இருக்காது. இதன் காரணமாகத்தான் மழை காலங்களில் விலை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு அக்டோபரில் ஆந்திராவில் அதிக மழை பெய்தது. இதன் காரணமாக ஏராளமான விளைச்சல் பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் கடுமையாக உயர்ந்த தக்காளி விலை, தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரிப்பு மற்றும் சாதகமான காலநிலை காரணமாக விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நிவாரணம் ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications