டெல்லி: மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிரிவில் முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது என்னென்ன என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
1. வருமான வரி அடுக்குகள் மற்றும் வரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதுள்ள பணவீக்க விகிதம் , விலைவாசி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. புதிய வரிமுறையில் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரி அடுக்கில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய வரி நடைமுறையில் தற்போது 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. இந்த 3 லட்சம் ரூபாய் என்ற வருமான வரி உச்ச வரம்பை அரசு 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
3. நிலையான வரி தள்ளுபடி 50,000 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதனை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
4. புதிய வரி நடைமுறையில் தற்போது 80சி பிரிவு என்பது கிடையாது . அதனை புதிய வரி முறையிலும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
5. பழைய வரி நடைமுறையில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடுகளை குறிப்பிட்டு வரி விலக்கு பெறலாம். இந்த வரம்பினை 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
6. வீட்டு கடன்களுக்காக செலுத்தப்படும் வட்டி தொகைக்கான வரிவிலக்கு வரம்பை 3 லட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
7. தற்போது வங்கிகளில் செலுத்தப்படும் டெபாசிட் தொகைகளில் இருந்து நமக்கு கிடைக்கக்கூடிய வட்டி வருமானம் 10,000 ரூபாயை கடந்தால் வரி விதிக்கப்படுகிறது. இதனை உயர்த்த வேண்டும் அவ்வாறு உயர்த்தினால் மக்கள் வங்கிகளில் சென்று முதலீடு செய்வது அதிகரிக்கும்.
8. மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான தொகை தற்போது அதிகரித்துள்ள நிலையில் அதற்கான வரம்பை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என்று ஊதியம் பெறக்கூடிய தனிநபர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
9. வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும் முறையை இன்னும் எளிதாக்க வேண்டும் அவ்வாறு செய்யும்போது இன்னும் ஏராளமானவர்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வார்கள் என சொல்லப்படுகிறது.
10. தற்போது இந்தியாவில் பல்வேறு மூலதனங்களில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கும் நடைமுறை மிகவும் சிக்கலாக இருப்பதால் அதனை எளிமைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications