ஐபிஎல்-லில் இவர்களை மிஞ்ச யாருமில்லை.. எத்தனை கோடின்னு நீங்களே பாருங்க..!!

ஐபிஎல் 2024 போட்டிகள் அடுத்த சில மணிநேரத்தில் துவங்க உள்ளது, முதல் போட்டியே சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு மத்தியில் சென்னையில் நடக்க உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் முதல் போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்கள் உள்ளனர், அப்படி டாப் 10 இடத்தில் இருப்பவர்கள் பட்டியல் தான் இது.

ஐபிஎல்-லில் இவர்களை மிஞ்ச யாருமில்லை.. எத்தனை கோடின்னு நீங்களே பாருங்க..!!

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12.25 கோடியை சம்பளமாக வழங்குகிறது. கேகேஆர் அணியின் முக்கிய வீரராகவும் கேப்டனாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளார்.

2022 மெகா ஏலத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் சிறப்பான பந்துவீச்சைப் பாராட்டும் வகையில் ரூ.14 கோடிக்கு வாங்கியது.

மெகா ஏல ஐபிஎல் 2022 இல், ராஜஸ்தான் ராயல்ஸ் தனது கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனை ரூ.14 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது.

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன், மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து 15 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர்தான் கேப்டன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கணிசமான முதலீடு செய்து, தங்கள் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை ரூ.15 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. கோஹ்லி 2008 முதல் ஆர்சிபி அணியில் இருந்து வருகிறார்.

2022 மெகா ஏலத்தின் போது, மும்பை இந்தியன்ஸ் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ரூபாய் 15.25 கோடிக்கு வாங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவை 16 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டது. தற்போதைய இந்திய கேப்டனாக இருந்தாலும், ஐபிஎல் 2024 இல் அவர் கேப்டனாக அணியை வழிநடத்தப் போவதில்லை.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்தை ரூ.16 கோடிக்கு வைத்திருந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை விபத்தால் தவறவிட்ட பந்த் மீண்டும் அதிரடியாக விளையாடுவார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ரூ.16 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. 2023 ஐபிஎல் சாம்பியனாவதற்கு கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் வெற்றி ரன்களை அடித்தது உட்பட அவரது திறமை சிஎஸ்கேவுக்கு முக்கியமானது ஆகும்.

கே.எல்.ராகுலை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிறுவனம் 17 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. ஐபிஎல் 2024க்கான அதிக விலைக்கு ஏலம்போன இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றார்.


Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+