ஐடி மற்றும் டெக் துறை துறை என்றாலே அதிக சம்பளம், ராஜ வாழ்க்கை என்பது தான் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இத்துறைக்கே உரிய பிரச்சனைகள் சில உள்ளது. அதுதான் மாறி வரும் தொழில்நுட்பமும், ஒரே அனுபவம் காலம் கொண்டவர்களுக்கு அதிகப்படியான வித்தியாசத்துடன் கிடைக்கும் சம்பளம்.
இந்த ஏஐ காலத்தில் அதிகப்படியான சம்பளம் திரும் வேலைவாய்ப்புகள் தான் தற்போது பலரது கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி எந்த பதவிக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது..? இந்த பிரிவில் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது..? எந்த தொழில்நுட்பத்திற்கு அதிகமான டிமாண்ட் உள்ளது..? என்பதை முழுமையாக பார்ப்போம்.

இந்திய ஐடி துறைகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான திறன்கள் வேகமாக மாறி வருகின்றன, இதனால் புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இந்த மாற்றம், தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தேவை அதிகம் உள்ள டெக் திறன்கள்
தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற வேண்டுமானால், சில முக்கிய திறன்களை கற்க வேண்டிய அவசியம் உள்ளது. இப்படி தற்போது இந்திய டெக் துறையில் அதிக டிமாண்ட் இருக்கும் முக்கிய Tech Skills இது தான்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள், கிளவுட் கம்பியூட்டிங் எக்ஸ்பர்டீஸ், டிசைன் மற்றும் ஆர்கிடெக்சர், சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்போ செக்யூரிட்டி, டாப் 5 பட்டியலில் கடைசியாக DevOps ஆகிய திறன்கள் தற்போது அதிக அளவில் தேவைப்படுகின்றன. இந்த திறன்களை பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகமாக உள்ளது, அதேபோல் சம்பளமும் கொடிக்கொடுக்கப்படுகிறது.

முக்கிய பதவிகள்
தற்போதைய டிரெண்டில் மெஷின் லேர்னிங் இன்ஜினியர், சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட், டெர் ஆர்கிடெக்ட் (என்டர்பிரைஸ், டேட்டா மற்றும் கிளவுட்), வெப் 3 புரோகிராமர்கள் மற்றும் பெண் பொறியியல் தலைவர்கள் போன்ற பதவிகள் தற்போது மிகவும் ஹாட் ஆக உள்ளது.
பதவிகளும் சம்பளமும்:
இந்திய டெக் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் (AI & ML) துறையில் 5 முதல் 10 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு ஆண்டு சம்பளம் ரூ.43 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.1.3 கோடியும், 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.2.1 கோடியும் சம்பளமாக கிடைக்கிறது.
அதேபோல், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி (CISO) பதவியில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ரூ.48 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ரூ.1.1 கோடியும், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ.1.4 கோடியும் கிடைக்கிறது.
தலைமை தொழில்நுட்ப வடிவமைப்பாளர் (CTA) பதவியில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ரூ.60 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ரூ.1.3 கோடியும், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ.1.5 கோடியும் வழங்கப்படுகிறது.

தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) பதவியில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ரூ.60 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ரூ.1.2 கோடியும், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ.2 கோடியும் கிடைக்கிறது.
தலைமை தகவல் அதிகாரி (CIO) பதவியில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ரூ.1.1 கோடியும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ரூ.2 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்த சம்பளம் பெரிய ஐடி நிறுவனங்களிலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் (முதலீடு, வர்த்தகம், ஐபிஓ வெளியிடும் திட்டம் ஆகியவைற்றை பொருத்து) பெரிய அளவில் மாறுப்படும்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

CEOக்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்து ஊழியர்களுக்கு கிள்ளி கொடுக்கும் நிறுவனங்கள்!! இதெல்லா நியாயமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications