இந்திய ரியல் எஸ்டேட் துறையில் எப்போதும் இல்லாத வகையில் 2023 ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் அதிகப்படியான வீடுகள் விற்கப்பட்டு உள்ளதாக ரியல் எஸ்டேட் கன்சல்டென்ட் நிறுனமான ANAROCK தெரிவித்துள்ளது. இந்தியாவில் இக்காலக்கட்டம் மிகவும் மந்தமான வர்த்தக நிலை பதிவு செய்யும் காலக்கட்டம் என்றாலும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் விற்பனை பதிவாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஆர்பிஐ கடந்த இரு நாணய கூட்டங்களாக வட்டி விகிதத்தை மாற்றாமல் இருந்தது தான் என கூறப்பட்டாலும் வரலாறு காணாத வகையில் வீடுகள் விற்பனையாக முக்கியமான காரணம் பெரு நகரங்களில் இருக்கும் அதிகப்படியான வாடகை மூலம் பலரையும் வீடு வாங்க தூண்டியுள்ளது.

இந்தியாவின் ஏழு டாப் பெரு நகரங்களில் வீடுகளின் விற்பனை 120,280 யூனிட்களை எட்டியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டின் இதே மாதங்களில் விற்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை வெறும் 88,230 யூனிட்கள் மட்டுமே. கடந்த வருட விற்பனை தரவுகளை ஒப்பிடுகையில் சுமார் 36 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதோடு ரியல் எஸ்டேட் ஆலோசகர் அனாரோக் வெளியிட்டு தரவுகளில் இந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலப் பகுதியில் சுமார் ஏழு நகரங்களில் சராசரியாக வீட்டு விலைகள் வருடாந்திர அடிப்படையில் சுமார் 11 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது, ஆயினும் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
7 டாப் பெரு நகரங்களில் வீடுகளின் விற்பனையில் மும்பை பெருநகரப் பகுதி முன்னணியில் உள்ளது. மும்பையில் பெருநகர பகுதியில் மட்டுமே தோராயமாக சுமார் 38,500 வீடுகள் விற்பனையாகி அதிக விற்பனை செய்துள்ளது. அடுத்தபடியாக புனே கிட்டத்தட்ட 22,885 வீடுகளை விற்பனை செய்து 2வது இடத்தில் உள்ளது.
மேலும் செப்டம்பர் காலாண்டில் செய்யப்பட்ட மொத்த விற்பனையில் மேற்கத்திய நகரங்கள் மட்டுமே சுமார் 51 சதவீத விற்பனை பங்கீட்டை பெற்றுள்ளது. இதில் முக்கியமாக மும்பையில் வீடுகள் விற்பனையில் 46 சதவீதமும், புனே-வில் 63 சதவீத வருடாந்திர உயர்வை பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications