இந்தியாவில் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான வேலைகளில் தற்போது திறமை வாய்ந்த நிபுணர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல முன்னணி நிறுவனங்கள், புதிய பணியாளர்களுக்கு கூட, ஆரம்ப சம்பளமாகவே மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் ஊதியம் வழங்க தயாராக உள்ளன.
நிறுவனங்களை வாங்குவது, விற்பது, டிஜிட்டல் நிதிச் சேவைகள் மற்றும் நிதி அபாயங்களை நிர்வகித்தல் போன்ற துறைகள் வேகமாக விரிவடைந்து வருவதால், அனுபவமும் திறமையும் உள்ளவர்களை தேடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

முதலீட்டு வங்கி :முதலீட்டு வங்கி என்பது, பெரிய நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் செல்வந்தர்கள் போன்ற வாடிக்கையாளர்களுக்கு நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் துறையாகும். இங்குப் பணிபுரிபவர்கள், நிறுவனங்கள் நிதி திரட்ட உதவுவது, மற்ற நிறுவனங்களை வாங்குவது மற்றும் விற்பது போன்ற முக்கியமான வர்த்தகங்களை செய்து முடிப்பது மற்றும் பங்குச் சந்தையில் புதிய பங்குகளை அறிமுகப்படுத்துவது போன்ற பல பணிகளில் ஈடுபடுவார்கள்.
இந்தப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், நிறுவனங்களின் மதிப்பைத் தீர்மானிப்பது, நிதி வர்த்தகங்களுக்கான திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள். வேலை கடினமானதாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே ஊதியம் மிக அதிகமாக இருக்கும்.
இதில், முக்கியப் பணியிடங்களான நிறுவன இணைப்பு ஆய்வாளர் (M&A Analyst) மற்றும் வர்த்தக ஆலோசகர் (Deal Advisor) ஆகிய இரண்டு பதவிகளுக்கும் ஆண்டிற்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பளம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு நிறுவனத்தின் எதிர்கால செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கான நிதி மாதிரிகளை உருவாக்கும் நிதி மாடலர் (Financial Modeler) என்ற பணிக்கு ஆண்டிற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது.
ஃபின்டெக் மற்றும் நிதிப் பகுப்பாய்வு : ஃபின்டெக் துறை (நிதி மற்றும் தொழில்நுட்பம்) இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. மொபைல் மூலம் பணம் செலுத்துதல், ஆன்லைனில் கடன் வழங்குதல் மற்றும் டிஜிட்டல் முறையில் முதலீடுகளை நிர்வகித்தல் போன்ற சேவைகளை மேம்படுத்த இது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்தப் பணிகளுக்கு, நிதி விதிகளும் டிஜிட்டல் கருவிகளும் தெரிந்த ஆட்களை தேவை. இந்த இரட்டை திறமை குறைவாகவே இருப்பதால், ஃபின்டெக் நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுத்து ஆட்களை எடுக்கின்றன.
அதன்படி, டேட்டா ஆய்வாளர் மற்றும் நிதி ஆய்வாளருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையும், குவாண்ட் ஆய்வாளருக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையும், ஃபின்டெக் தயாரிப்பு ஆய்வாளருக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது.
நிதி அபாயங்களை குறைக்கும் சிறப்புப் பணி : இதன் முக்கியப் பணி, நிறுவனத்துக்கு வரக்கூடிய நிதி அபாயங்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பது, அதன் விளைவுகளை ஆய்வு செய்வது மற்றும் அந்த அபாயங்களை தவிர்ப்பதா அல்லது ஏற்றுக்கொள்வதா என்று முடிவெடுக்க உதவுவது ஆகும். சந்தை நிலவரங்கள் மாறும்போது அபாயங்களும் மாறுவதால், இந்த வேலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே, தங்கள் முதலீடுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த இடர் குழுக்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள், ஆரம்பத்தில் இருந்தே அதிக சம்பளம் வழங்குகின்றன.
அதன்படி, குவாண்ட் ரிஸ்க் ஆய்வாளருக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையும், சந்தை இடர் ஆய்வாளருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையும், கடன் இடர் ஆய்வாளருக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் நிதிச் சந்தை மென்மேலும் நவீனமாகி வருவதால், பகுப்பாய்வுத் திறன், நிதிச் சந்தை அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் கொண்டவர்களுக்கு இந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications