இந்திய குவிக் காமர்ஸ் துறையில் முடிசூடா மன்னனாக இருக்கும் பிரபல இன்ஸ்டன்ட் டெலிவரி நிறுவனமான Zepto-வில் மோசமான வேலைச் சூழல் நிலவுவதாக, இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சமுகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. இது தொடர்பான பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பதிவை ரெட்டிட் தளத்தில் Scary_split3157 என கணக்கில் இருந்து பதிவிடப்பட்டு உள்ளது, இதில் “நான் ஒரு வருடமாக Zepto-வில் பணிபுரிந்து வருகிறேன். இந்த நிறுவனம் மிகவும் விஷத்தன்மையான வேலைச் சூழல். இதற்கு அதிகமான புகழ் கிடைத்திருந்தாலும், உண்மையான நிலைமை எப்படி இருக்கிறது என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பதிவில் பின்வரும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன:
1. செப்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித் பலிச்சா, தாமதமாக எழுந்திருப்பதால் மதியம் 2 மணிக்கு தான் பணியை தொடங்குவார். இதன் காரணமாக, அதிகாலை 2 மணிக்கு மீட்டிங்கிற்கு அழைக்கப்படுகின்றன.

2. பல ஊழியர்கள் பகல் 12 மணிக்கு தான் வேலைக்கு வருகிறார்கள். இதனால், ஊழியர்களை காலை 10 மணிக்கு வேலைக்கு வர ஊக்குவிக்க இலவச காலை உணவு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், இரவு 11 மணிக்கு மேலாக வேலை முடிக்கப்படுகிறது.
3. அனைத்து மீட்டிங்கும் தாமதமாக தொடங்குகின்றன. கூட்டங்கள் நேரத்திற்கு நடைபெறுவதில்லை மற்றும் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன.

4. அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இத்தகைய வேலைச் சூழலில் பணிபுரிய விரும்பாததால், அதிகமான இளைஞர்கள் வேலைக்கு நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 14 மணி நேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
5. வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக பணம் வசூலிப்பதற்காக பயன்பாட்டில் பல மோசமான வர்த்தக முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. உதராணமாக 30,000 ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள ஃபோன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

6. வாடிக்கையாளர் தரவுகள் அடிப்படையில் ஒவ்வொரு செப்டோ கணக்கும் மதிப்பிடப்பட்டு பிரிக்கப்படுகிறது. மேலும் செப்டோ தளத்தில் பாதுகாப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல தரவு கசிவுகள் ஏற்பட்டிருந்தாலும், வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர் அழுத்தங்கள் காரணமாக இதை சரிசெய்வது முக்கியமானதாக கருதப்படுவதில்லை.

இந்த குற்றச்சாட்டுகள் Zepto நிறுவனத்தின் வேலைச் சூழல் மற்றும் வாடிக்கையாளர் நலன் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. செப்டோ நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications