இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் ஏப்ரல் 26 முதல் மே 14 வரையிலான நாட்களுக்கு இந்தியாவில் இயங்கி வரும் இரு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூட முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் தொழிற்சாலையில் மெயின்டனன்ஸ் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ். இதேபோன்ற அறிவிப்பைத் தான் சில நாட்களுக்கு முன்பு நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் தெரிவித்தது.

ஏப்ரல் 26 முதல் மே 14 வரையிலான காலகட்டத்தில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பிடாடி தொழிற்சாலையில் கார் உற்பத்தி பணிகளை முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இக்காலகட்டத்தில் நிலுவையில் இருக்கும் கார்களை விற்பனை செய்யும் பணிகளைச் செய்ய டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கிட்டத்தட்ட 20 நாட்கள் மெயின்டனன்ஸ் பணிகள் மேற்கொள்ளும் நேரத்தில் குறைந்த அளவிலான ஊழியர்களுக்கு மட்டுமே தொழிற்சாலையில் அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்படும் ஊழியர்களும் சமூக இடைவெளி மற்றும் இதர கொரோனா வழிமுறைகளைக் கடைப்பிடித்து பணியாற்ற உள்ளனர்.
மேலும் டொயோட்டா இந்தியாவில் கிளான்ஸா, அர்பன் க்ரூசியர் ஆகிய கார்களை வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் இந்தக் கார்களுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் இருக்காது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக, இந்தியாவில் இருக்கும் தனது உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளது. இதன் மூலம் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ள இந்த நேரத்தில் அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி தளத்திலும் maintenance பணிகளை முழுமையாக முடிக்கப்படத் திட்டமிட்டுள்ளது ஹீரோமோட்டோகார்ப் நிறுவனம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications