ரயில் வெயிட்டிங் லிஸ்ட் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி.. ரூ.1 லட்சம் கோடியில் ரயில்வே மெகா ப்ளான்..!

சாமானிய மக்களுக்கு குறைந்த செலவில் நீண்ட தூர பயணங்களை சாத்தியமாக்கியது ரயில் போக்குவரத்து என்றால் அதற்கு யாரும் மாற்று கருத்து இருக்காது. கார், பஸ் போன்ற வாகனங்களில் பயணிப்பதை காட்டிலும் அதிக பாதுகாப்பு, செலவு குறைவு, டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் மற்றும் குறித்த நேரத்தில் சேருமிடத்தில் இறங்கலாம் போன்ற நன்மைகள் இருப்பதால் மக்கள் ரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரயில் பயணத்துக்காக தேவை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தேசிய போக்குவரத்து நிறுவனமான இந்தியன் ரயில்வே, காத்திருப்போர் பட்டியலை பூஜ்யமாக குறைக்க மற்றும் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புக்கு புதிய ரயில்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

ரயில் வெயிட்டிங் லிஸ்ட் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி.. ரூ.1 லட்சம் கோடியில் ரயில்வே மெகா ப்ளான்..!

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக கூறியதாவது: 2023-24ம் நிதியாண்டுக்கு ரயில்வேக்கு மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.4 லட்சம் கோடியில் 70 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.

இந்த பெரும் நிதி தொகையில் பழமையான ரயில்களை புதிதாக மாற்றுவதே முக்கிய இலக்காகும். அதற்காக 7,000-8,000 புதிய ரயில் பெட்டிகள் தேவைப்படும். அதற்கான டெண்டர்கள் அடுத்த 4-5 ஆண்டுகளில் வெளியிடப்படும். இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ரயில் கொள்முதல் டெண்டர்கள் மேற்கொள்ளப்படும். பழைய ரயில்களை மாற்றுவதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இது சிறப்பிக்கப்படும்.

இந்த நடவடிக்கையானது ரயில்வேயின் பெரிய மேம்படுத்தலின் ஒரு பகுதியாகும். இது பாதைகளை விடுவிப்பது மற்றும் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் பயணிகள் மற்றும் சரக்கு பொருட்களுக்கு அதிக ரயில்களை கிடைக்க செய்கிறது. தற்போதைய பொருளாதார வளர்ச்சியை ஏற்ப 2030ம் ஆண்டுக்குள் ரயில்வேயில் சுமார் ரூ.12 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும்.

இந்தியன் ரயில்வே தற்போது தினமும் 10,754 ரயில் பயணங்களை இயக்கி வருகிறது. கோவிட்-19க்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுட்டால் தற்போது ரயில்வே கூடுதலாக 568 ரயில் பயணங்களை இயக்கி வருகிறது. மேலும் காத்திருப்போர் பட்டியலை பூஜ்ஜியமாக குறைக்க மேலும் 3,000 ரயில் பயணங்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தற்போது இயக்கப்படும் ரயில் பயணங்கள், ஒவ்வொரு ஆண்டும் 700 கோடி பயணிகளை கொண்டு செல்ல ரயில்வே உதவுகிறது. இது 20230ம் ஆண்டுக்குள் 1,000 கோடியாக உயரும். பயணிகள் பிரிவில் காத்திருப்போர் பட்டியல் பிரச்சினைக்கு தீர்வு காண பயணங்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் அதிகரிப்பு இருக்க வேண்டும்.

திட்டமிட்டப்படி ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பு நிதியாண்டில் 5,500 முதல் 6,000 கி.மீட்டர் புதிய பாதைகளுடன் நிறைவு செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு 16 கி.மீட்டர் ரயில் பாதை போடப்பட்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் 5,243 கி.மீட்டர் பாதைகள் ( நாள் ஒன்றுக்கு 14 கி.மீ.) அமைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+