பிரதமர் மோடியின் முயற்சியால் தற்போது இந்தியா முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகமாகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக யுபிஐ பணப்பரிவர்த்தனையை தற்போது அதிக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யுபிஐ பணப் பரிவர்த்தனையில் இதுவரை டெபிட் கார்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிரெடிட் கார்டுகளுக்கும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கிரெடிட் கார்டு
NPCI சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் ரூ.2,000 வரையிலான ரூபே கிரெடிட் கார்டு பண பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் இல்லை
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கிரெடிட் யுபிஐ பண பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டுகள் அனுமதிக்கப்படும் என்றும், குறிப்பாக ரூபே கிரெடிட் கார்டுகள் யுபிஐ மூலம் பயன்படுத்தினால் ரூ.2,000 வரை கட்டணங்கள் இல்லை என அறிவித்துள்ளது.
ரூபே கிரெடிட் கார்டுகள்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ரூபே கிரெடிட் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளது என்பதும் இந்த கார்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் MDR வகைக்கு ரூ.2,000 குறைவான மற்றும் அதற்கு சமமான பரிவர்த்தனை தொகைக்கு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு பயனர்களுக்கு தரும் சலுகையாக பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி ரபிசங்கர் அவர்கள் கூறியபோது, 'கிரெடிட் கார்டுகளை யுபிஐ உடன் இணைப்பதன் அடிப்படை நோக்கம் என்னவெனில் வாடிக்கையாளருக்கு பரந்த அளவிலான பரிவர்த்தனையை வழங்குவது என்றும், தற்போது, யுபிஐ-இல் டெபிட் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இனி கிரெடிட் கார்டுகளும் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.
பயனர்கள்
யுபிஐ பரிவர்த்தனையில் ரூபே கார்டுகளை இணைக்கும் நடவடிக்கையால் பயனர்கள் பரவலாக ரூபே கார்டுகளை ஏற்றுக்கொள்ள ஊக்கம் அளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications