விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வெறும் 26 ரூபாயில் விமான பயணம் செய்யலாம் என்ற சலுகை அறிவிப்பு விமான பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்! 26 ரூபாயில் இந்தியாவிலிருந்து வியட்நாம் நாட்டிற்கும், வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்ஜெட்
வியட்ஜெட் விமான நிறுவனம் இந்த சலுகையை விமான பயணிகளுக்காக ஒரு வாரம் மட்டும் வழங்குகிறது. ஜூலை மாதத்தில் இரட்டை 7/7 நாளை முன்னிட்டு, வியட்ஜெட் ஒரு வார கால டிக்கெட் தள்ளுபடியை 777,777 விமான பயணிகளுக்கு வெறும் ரூ. 26 கட்டணம் மட்டுமே வசூலிக்க உள்ளது.
சிறப்பு கட்டணம்
இந்த சிறப்பு டிக்கெட்டுகள் வியட்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் அனைத்து சர்வதேச வழிகளிலும் முன்பதிவு செய்ய செல்லுபடியாகும். ஜூலை 7 முதல் ஜூலை 13 வரை இந்த சிறப்பு கட்டண டிக்கெட்டுக்களை பெற்று கொள்ளலாம். பயணத்திற்கான கால அளவு ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரை ஆகும்.
இணையதளம் - செயலி
இந்த சிறப்பு டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய வியட்ஜெட் விமான நிறுவனத்தின் இணையதளமான www.vietjetair.com என்ற இணையதளத்திற்கு சென்று வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். மேலும் வியட்ஜெட் ஏர் என்ற மொபைல் செயலி மூலம் இந்த சிறப்பு டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எந்தெந்த நாடுகளுக்கு?
வியட்ஜெட் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, இந்த விளம்பர டிக்கெட்டுகள் வியட்நாமில் உள்ள உள்நாட்டு வழிகள் மற்றும் சர்வதேச வழித்தடங்களில் பொருந்தும். இந்தியா, கொரியா குடியரசு, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களுக்கான இந்த சிறப்பு டிக்கெட்டுக்களை எடுத்து கொள்ளலாம். தேசிய விடுமுறை நாட்களில் மட்டும் சலுகை டிக்கெட்டுக்கள் கிடையாது.
மும்பை-வியட்நாம்
வியட்ஜெட் நிறுவனம் இந்திய நகரங்களான மும்பை மற்றும் வியட்நாமிய நகரமான ஹோ சி மின் நகரம்/ஹனோய் மற்றும் புது தில்லி/மும்பை முதல் ஃபூ குவோக் வரை சேவை செய்து வருகிறது.
புதுடெல்லி - வியட்நாம்
புது தில்லியை ஹோ சி மின் நகரம் / ஹனோய் உடன் இணைக்கும் இரு நாடுகளின் முதல் நேரடி விமானச் சேவை ஏப்ரல் மாதமே தொடங்கியது. இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு வாரமும் 3 முதல் 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன. திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை-ஃபு குவோக் வழித்தடத்தில் 4 வாராந்திர விமானங்கள் தொடங்கும். புது தில்லி மற்றும் Phu Quoc இடையேயான சேவைகளும் செப்டம்பர் 9, 2022 முதல் தொடங்கவுள்ளது. இந்த விமானங்கள் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications