இந்திய விமானச் சேவை கட்டுப்பாட்டு ஆணையமான DGCA அமைப்பு செக் இன் லக்கேஜ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை அளிக்க விமான நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் விமானப் பயணக் கட்டணத்தில் கணிசமான சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டண சலுகையின் மூலம் புதிய விமானப் பயணிகளை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் குறைந்த விலையில் விமானப் பயணத்தை மேற்கொள்ளவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு அடிப்படை கட்டணத்தை உயர்த்த இந்திய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுக் கட்டண நிர்ணயத்தில் அதிகளவிலான சலுகைகள் அளிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து செக் இன் லக்கேஜ் இல்லாமல் வருபவர்களுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை அளிக்க DGCA ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக விமானப் பயணத்தில் குறிப்பிட்ட அளவிலான எடை கொண்ட லக்கேஜ்-க்கு விமான டிக்கெட்டை பொருத்து ஜீரோ கட்டண சேவை அளிக்கப்படுகிறது, ஆனால் பலருக்கு இந்தச் சேவை தேவைப்படாத காரணத்தால், இதைத் தனியாகப் பிரித்துச் சேவை அளிப்பதன் மூலம் பலருக்கு விமானக் கட்டணத்தில் சலுகை பெற முடியும்.
இந்தப் புதிய மாற்றத்தின் மூலம் அவசர பயணங்கள், பிஸ்னஸ் ட்ரிப் போன்ற பயணங்களில் செக் இன் லக்கேஜ் இல்லாமல் செல்வோருக்கு விமானக் கட்டணத்தில் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.