தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் TRB ராஜா, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் அலுவலக இடங்களின் பற்றாக்குறை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் அதிகரித்து வரும் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தரமான அலுவலக இடங்களை உருவாக்க முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் பெரிய அளவிலான ஏ-கிரேடு வணிக இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தமிழகம் ஈர்த்து வரும் முதலீடுகளின் வேகத்திற்கு ஏற்ப, இன்னும் அதிக அளவிலான அலுவலக இடங்கள் தேவைப்படுகிறது என்று அமைச்சர் ராஜா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். எனவே, பெரிய வணிக கட்டுமான நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உயர்தர ஏ-கிரேடு உள்கட்டமைப்பில் விரைவாக முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் சுமார் 9.6 மில்லியன் சதுர அடி அலுவலக இடங்களை நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 31% அதிகம். ஐடி, ஐடி - பிபிஎம் (IT-BPM), வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) மற்றும் co-working spaces போன்ற துறைகளின் அதிரடியான வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகும் என டிஆர்பி ராஜா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பாக, கோ வொர்கிங் ஸ்பைஸ் பங்கீடு 2022 இல் 12% ஆக இருந்தது, 2023 இல் கிட்டத்தட்ட 20% ஆக அதிகரித்துள்ளது. 2026 ஆம் ஆண்டளவில், சென்னையில் அலுவலக இடங்களின் மொத்த அளவு 100 மில்லியன் சதுர அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மட்டுமல்லாமல், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ஓசூர், தூத்துக்குடி போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் அலுவலக இடங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நகரங்களிலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா ரியல் எஸ்டேட் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் பல லட்சம் சதுர அடி அலுவலக இடங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மதுரை மற்றும் திருச்சியிலும் அதிக அளவிலான அலுவலக இடங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்று ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு, இரண்டாம் நிலை நகரங்களில் TIDEL Neo பூங்காக்கள் மூலம் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. மேலும் பல இடங்களில் புதிய நியோ டைடல் பார்க் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. எனவே, தனியார் துறையும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்வந்து, தரமான அலுவலக இடங்களை உருவாக்க வேண்டும் என்று டிஆர்பி ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications