தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில் திருச்சி முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு அரசும் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது.
பல்வேறு நிறுவனங்கள் திருச்சியில் வந்து முதலீடு செய்கின்றன. இதனால் வெளியில் இருந்து வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது எனும்போது அவர்கள் பொழுது போக்குவதற்கான தளங்களும் அந்த இடத்தில் கட்டாயம் இருந்தாக வேண்டும். அப்பொழுதுதான் அந்த முதலீடுகளும் வெளியிலிருந்து வரக்கூடிய மக்களும் அந்த இடத்தில் நீடிப்பார்கள் .சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் எல்லாம் மால்கள் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது .

வாரத்தில் ஐந்து நாட்கள் பிசியாக வேலை செய்ய கூடிய மக்கள் வார இறுதி நாட்களில் தங்களின் பொழுதை போக்கவும் ரிலாக்ஸ் செய்யவும் மால்கள் பெரிய உதவியாக இருக்கின்றன. உணவகங்கள் ,ஷாப்பிங் செய்வதற்கான கடைகள், சினிமா தியேட்டர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் மால்களுக்கு சென்று வருவது என்பது அவர்களின் வழக்கமான பணிகளில் ஒன்றாக மாறி இருக்கிறது.
ஆனால் திருச்சி மாவட்டம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் மால் எதுவும் அங்கே கிடையாது . திருச்சியில் மால்கள் திறக்கப்படுமா என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் மக்கள். இந்நிலையில் முதன்முறையாக திருச்சியில் பிரம்மாண்டமான மால் ஒன்று கட்டப்பட இருக்கிறது. அதற்கான கட்டுமான பணி இன்று தொடங்கியுள்ளது.
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் 3.9 லட்சம் சதுர அடி பரப்பளபில் ஷாப்பிங் மால் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு பாரத் மால் என பெயரிட்டு இருக்கிறார்கள். பாரத் குரூப் என்ற நிறுவனம் திருச்சியில் பாரத் மால் என்ற மிகப்பெரிய ஷாப்பிங் மாலை அமைக்க இருக்கிறது. திருச்சியில் மிகப்பெரிய மாலாக இது அமையும் என தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு என்பது நிறைவேற போகிறது.
சென்னை திருச்சி பைபாஸ் என்ற முக்கியமான இடத்தில் அமைந்து இருப்பதால் திருச்சி நகர மக்கள் மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இங்கே வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்வேறு பிரீமியம் பிராண்டுகளின் கடைகள் அனைத்தும் இந்த மாலில் அமைக்கப்பட இருக்கிறது .
பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடம், பொழுது போக்குவதற்கான இடங்கள் ,ஃபுட் கோர்ட், குழந்தைகளுக்கான ஃபன் சிட்டி, சினிமா தியேட்டர் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டன. இனி விறு விறுப்பாக பணிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் டைனிங் , பொழுதுபோக்கு அனுபவங்கள் கிடைக்க உள்ளன. இந்த மால் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக போகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications