திருச்சி-க்கு ஜாக்பாட்.. ரூ.485 கோடியில் பாதுகாப்புத் தளவாட உதிரிபாக உற்பத்தி..!

திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலைகளுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் வகையில் ரூ.485 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (TIIC) மண்டல மேலாளர் ஜி. சகாதேவன் தெரிவித்தார்.

திருச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக் கடன் வழங்கும் விழாவில் 2 தொழில்முனைவோருக்கு சுமார் ரூ.60 லட்சத்திற்கான கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் ஜி. சகாதேவன்.

திருச்சி-க்கு ஜாக்பாட்.. ரூ.485 கோடியில் பாதுகாப்புத் தளவாட உதிரிபாக உற்பத்தி..!

இந்த நிகழ்ச்சியில் ஜி.சகாதேவன் பேசுகையில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தொழில் துறைக்கு தமிழகம் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொலைநோக்குப் பார்வையுடன் தமிழகப் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை நிர்ணயம் செய்துக் கொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, தொழில் முதலீட்டுக் கழகம், தொழில் வா்த்தகக் கழகம், இந்திய பாதுகாப்புத் தளவாட உற்பத்தியமைப்பு (எஸ்ஐடிஎம்) உள்ளிட்ட தொழில் கூட்டமைப்புகளோடு இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் ரூ.485 கோடி முதலீடு மற்றும் 1,960 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக தமிழ்நாட்டின் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறையில் புதியதொழில் முனைவோரை உருவாக்குவதுடன், ஏற்கெனவே இயங்கி வரும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்த பயனுள்ளதாக அமையும்.

இத்திட்டங்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோர் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் நிதியுதவி பெற்று தொழில் கூடங்களை விரிவாக்கவும், புதிய கூடங்களைத் தொடங்கியும் பயனடையலாம் என தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் ஜி.சகாதேவன் பேசினார்.

பின்னர் 5 தொழில் முனைவோர் தங்களது தொழில் கடன்களுக்காக வழங்கிய 21 கோடி ரூபாய்க்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட மண்டல மேலாளர் ஜி.சகாதேவன், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நிகழ்வில் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ஏ.செந்தில்குமார், சிட்கோ கிளை மேலாளர் ராஜாராம், சிப்காட் உதவிப் பொறியாளர் ஜி. பாலமுரளி மற்றும் வங்கியாளர்கள், வா்த்தக நிறுவனத்தினர், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+