திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் 415 கோடி ரூபாய் செலவில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடப்பு மாதத்திலேயே தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமும் தமிழ்நாடு மின்னணு கழகமும் இணைந்து தமிழ்நாடு டைடல் பார்க் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனம் சார்பாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் டைடல் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது.

இத்தகைய டைடல் பூங்காக்களில் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை நிறுவுவது மிக எளிமையாக இருக்கிறது. இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே சென்னை ,கோவை போல திருச்சி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 93 ஆயிரம் சதுரடியில் சுமார் 415 கோடி ரூபாய் செலவில் இந்த டைடல் பூங்கா கட்டப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த டைடல் பார்க்கில் 740 கார் நிறுத்துமிடம் மற்றும் 1500 இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த டைடல் பார்க் மூலம் 5000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது.
இந்த டைடர் பார்க் தரைதளத்துடன் கூடிய 6 தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இரண்டு கட்டங்களாக கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. முதல் கட்ட கட்டுமான பணிக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள்ளேயே கட்டுமான பணிகள் தொடங்கிவிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டுமான பணிகள் சுமார் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டத்தில் 5.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக 14 .1 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலத்திற்காக டைடல் பார்க் நிறுவனம் திருச்சி மாநகராட்சிக்கு 12.8 கோடி ரூபாயை செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
டைடல் பார்க் கட்டுவதற்காக கண்டறியப்பட்டுள்ள நிலத்தில் கழிவு நீர் குழாய்கள் கடந்து செல்வது தெரிய வந்துள்ளது. இதனை வேறு இடத்திற்கு மாற்றுமாறு டைடல் பார்க் நிர்வாகம் திருச்சி மாநகராட்சி இடம் கோரிக்கை வைத்துள்ளது.
மொத்தம் 1730 மீட்டர் நீளம் கொண்ட இந்த கழிவு நீர் குழாய்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கான செலவை டைடல் பார்க் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முடிவடைந்த உடன் முதல் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கி விடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Story Written by: Devika
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications