தமிழ்நாடு அரசு நிறுவனமான TNPL தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே TNPL தனது பேப்பர், பேகேஜ் பொருட்கள், சிமெண்ட் ஆகியவைற்றைச் சுமார் 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் வேளையில் இப்புதிய திட்டம் அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.
திருச்சி மணப்பாறை பகுதியில் TNPL நிறுவனம் மிகப்பெரிய தொழிற்சாலைகளை வைத்து இயக்கி வரும் வேளையில், இதே பகுதியில் 3வது தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.

மணப்பாறையில் வருடத்திற்குச் சுமார் 34,000 டன் அளவிலான டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக உலகளவிலான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் மூலம் சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் TNPL நிறுவனம் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலை துவங்கி இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
TNPL நிறுவனம் திருச்சி மணப்பாறையில் மட்டும் இதுவரையில் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து பெரும் வர்த்தகத்தையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
TNPL என அழைக்கப்படும் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் கரும்பு கழிவு பொருட்களில் ஒன்றான பாக்காஸை- பயன்படுத்திச் செய்தித்தாள் பிரிண்ட் செய்யவும் மற்றும் எழுத்துவதற்குப் பயன்படுத்தும் பேப்பர்களைத் தயாரிக்கிறது.
இந்தத் தொழிற்சாலை தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள காகிதபுரம் மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பேப்பர் அனைத்தும் உள்நாட்டில் விற்கப்படுவது மட்டும் அல்லாமல் மொத்த உற்பத்தியில் 18 சதவீதத்தை 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
1997 ஆம் ஆண்டு முதல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் TNPL நிறுவனத்தில் சுமார் 35.32 சதவீத பங்குகளைத் தமிழ்நாடு அரசு வைத்துள்ளது.
TNPL பேப்பர் மட்டும் அல்லாமல் பேகேஜ் பெட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் அட்டைகளையும் தயாரிக்கிறது. இந்தத் தொழிற்சாலை மட்டும் சுமார் 874 ஏக்கரில் மொண்டிபட்டி & மணப்பாறை தாலுக்காவில் அமைந்துள்ளது. வருடத்திற்கு 2 லட்சம் மில்லியன் டன் பேகேஜ் பெட்டிகளைத் தயாரிக்கிறது.
TNPL நிறுவனத்தின் பேப்பர், அட்டைபெட்டி தயாரிப்பில் கிடைக்கும் கழிவுகளை வைத்துச் சிமெண்ட் தயாரிக்கிறது. இது ஒரு வேல்யூ ஆடட் உற்பத்தியாகப் பார்க்கப்படுகிறது. 2013 இல் நிறுவப்பட்ட TNPL இன் சிமெண்ட் ஆலை தமிழ்நாட்டின் மையப்பகுதியான கரூர் காகிதபுரத்தில் அமைந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications