ஈரான் அட்டாக்.. டிரம்ப்-க்கு எதிராக நிற்கும் அமெரிக்க அரசியல் தலைவர்கள்.. முதல்ல எங்களுக்கு பதில சொல்லுங்க..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு ஈரான் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளதாக வீடியோ வாயிலாக தெரிவித்துள்ள பின்பு, ஈரானுக்கு எதிரான சமீபத்திய ராணுவ தாக்குதல் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.

"எனக்கு வேண்டியது மக்களுக்கு சுதந்திரம் மட்டுமே. அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். இது அவரது 'Truth Social' பக்கத்தில் வெளியிட்ட வீடியோவிலும், 'வாஷிங்டன் போஸ்ட்' பேட்டியிலும் தெரிவித்தார். ஈரான் மக்களை தங்கள் நாட்டு அரசை மாற்ற அழைத்த டிரம்ப், "இது பல தலைமுறைகளுக்குப் பிறகு கிடைத்த ஒரு வாய்ப்பு" என்றும் கூறினார்.

ஈரான்: டிரம்ப்-க்கு எதிராக நிற்கும் அமெரிக்க அரசியல் தலைவர்கள்.. முதல்ல எங்களுக்கு பதில சொல்லுங்க..!

ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. பல அரசியல்வாதிகள் இது சட்டவிரோதமானது என்றும், அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக செனட்டர் எட்வர்ட் ஜே.மார்கி, "காங்கிரஸ் அனுமதி இல்லாமல் ராணுவ நடவடிக்கை செய்வது தவறு" என்று கடுமையாக விமர்சித்தார். இது அமெரிக்க படையினருக்கும் பொதுமக்களுக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

மேலும், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை டிரம்ப் மிகைப்படுத்தி கூறுவதாகவும், 'Operation Midnight Hammer' என்ற தாக்குதலில் ஈரான் அணு திட்டம் முழுமையாக அழிக்கப்பட்டது என்பதற்கு எவ்விதமான ஆதாரம் இல்லை என்றும் மார்கி குற்றம்சாட்டினார்.

இதேவேளையில் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தாமஸ் மாசி கூட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இந்த போரை நான் ஆதரிக்கவில்லை. இது 'America First' கொள்கைக்கு எதிரானது" என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின்படி, போர் தொடங்குவது போன்ற முடிவுகளுக்கு காங்கிரஸ் ஒப்புதல் தேவை என்றும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் முன் கொண்டு வர முயற்சிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். "உங்கள் பிரதிநிதி இந்த போரை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் "மக்களுக்கு சுதந்திரம்" என்று கூறி ஈரான் மக்களை தூண்டியுள்ள நிலையில், அமெரிக்க அரசியலமைப்பு விதிகளை மீறியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளையில் ஈரான் தெஹ்ரானில் அமெரிக்கா-வின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு போராட்டத்தை மக்கள் நடத்தி வருவதாக அலஜசிரா தெரிவித்துள்ளது

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அதிபர் டிரம்ப் எவ்வளவு தூரம் ராணுவ நடவடிக்கை செய்யலாம்? காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் போர் தொடங்க முடியுமா? என்ற கேள்விகள் மீண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முக்கியமாகியுள்ளன.

இந்த சர்ச்சை அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை, அரசியலமைப்பு அதிகார பிரிவு, மத்திய கிழக்கு பகுதியின் எதிர்காலம் ஆகியவற்றை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டிரம்பின் இந்த நடவடிக்கை பாதுகாப்பு நோக்கத்துக்காக மட்டுமா அல்லது வேறு அரசியல் காரணங்களுக்காகவா என்ற விவாதம் தொடர்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+