அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்கிழமை இரவு வெளியிட்ட சமுக வலைத்தள பதிவில், வெனிசுலாவின் தற்காலிக அரசு 30 முதல் 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை அமெரிக்காவுக்கு வழங்க உள்ளதாகவும், இதற்காக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அறிவித்தார்.
இதை விட முக்கியமாக இந்த கச்சா எண்ணெய் சந்தை விலையிலேயே அமெரிக்காவுக்கு விற்கப்படுவதாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தை அமெரிக்கா அரசே வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்யும், மேலும் இப்பணத்தை வைத்து வெனிசுலா மக்களுக்கும் அமெரிக்காவுக்கும் பயன்படுத்தும் என டிரம்ப் தனது சொந்த சமுகவலைத்தளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த மூன்று நாட்களில் இந்த மாபெரும் அறிவிப்பு வந்துள்ளது. இது உலக எண்ணெய் சந்தையை பாதிக்கும் முக்கியமான நிகழ்வாக உள்ளது.
வெனிசுலா கச்சா எண்ணெய் உயர்தரமானது மற்றும் தடை செய்யப்பட்டது. ஆயினும் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த பின்னரும், வெனிசுலாவை கைப்பற்றிய பின்னரும் ஒரு சில நாட்களில் வெனிசுலா எண்ணெய்யின் உற்பத்தியை பெரிய அளவில் உயர்த்தை அதை அமெரிக்க நிறுவனங்கள் வாங்குகிறது.
அமெரிக்காவின் எனர்ஜி பிரிவு செயலர் கிறிஸ் ரைட் இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். எண்ணெய் சேமிப்பு கப்பல்கள் மூலம் அமெரிக்காவின் துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படும். இந்த 30-50 மில்லியன் பேரல் கச்சா என்பது எண்ணெய் பெரியதாகத் தோன்றினாலும், அமெரிக்கா கடந்த மாதத்தில் தினசரி 20 மில்லியனுக்கும் அதிகமான பேரல்களை பயன்படுத்தியுள்ளது.
இதனால் வெனிசுலாவின் புதிய சப்ளை சிறிய அளவில் மட்டுமே அமெரிக்காவுக்கு உதவும், இதேபோல் இந்த கூடுதல் சப்ளை மூலம் அமெரிக்காவில் எரிபொருள் சேமிப்பை அதிகரிக்க முடியும், இதேபோல் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த முடியும்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு அமெரிக்காவின் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் விலை 1.3 சதவீதம் குறைந்து ஒரு பேரலுக்கு 56.39 டாலர் அளவைத் தொட்டது. காரணம் கூடுதல் சப்ளை கிடைப்பதால் இதன் விலை குறைந்துள்ளது.
இதை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்த தொகையை பயன்படுத்தலாம் என தெரிகிறது. ஏற்கனவே அமெரிக்கா நிறுவனங்களை வெனிசுலாவில் முதலீடு செய்ய டிரமப் அழைத்திருக்கும் வேளையில், அமெரிக்கா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் தொகை டிரம்ப் அரசின் கையில் இருக்கப்போகிறது. இதனால் அமெரிக்க அரசு தனது விருப்பம்போல் வெனிசுலாவில் முதலீடு செய்யும்.
அடுத்தக்கட்டமாக அமெரிக்கா வெனிசுலாவில் இருந்து இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, அரிய உலோகம் போன்றவற்றை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு கொண்டு வரலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications