அமெரிக்க - ஈரான் மத்தியிலான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 101 டாலரை தாண்டியுள்ளது, இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தின் முர்பான் கச்சா எண்ணெய் விலை 116 டாலர் வரையில் உயர்ந்து பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்-ன் ஆதிக்கத்தை சோதனை செய்யும் மிட்டேர்ம் தேர்தல் அடுத்த 2 மாதங்களில் துவங்க இருக்கும் வேளையில் டிரம்ப் ஈரான் போர் குறித்து முக்கியமான தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது டிரம்ப் அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தல் முடிந்த உடனேயே ஈரான் போர் முடிவுக்கு வரும் என தான் கணித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் மிட்டேர்ப் தேர்தலில் வாக்கு பதிவு நடந்த உடன் கச்சா எண்ணெய் விலை தடாலடியாக குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மிட்டேர்ப் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் வேளையில், எப்படி இரண்டு மாதத்திற்கு பின்பு போர் முடிந்து, கச்சா எண்ணெய் குறையும்..? இதற்கு டிரம்ப் கொடுத்த விளக்கத்தில் ஈரான் நாட்டின் பொருளாதாரம் அதுவரையில் தாக்குப்பிடிக்காது, போரை தொடர் முடியாமல் பின்வாங்கும் என விளக்கம் கொடுத்தார்.
டிரம்ப் இதற்கு முன்பு ஈரானுடன் போர் துவங்கும் போது, இந்த போர் ஒரு சில வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என கூறினார், ஆனால் தற்போது 7வது மாதமாக ஈரானுடனான அமெரிக்காவின் போர் தொடர்கிறது.
மேலும் டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் மிட்டேர்ப் தேர்தல் நடக்கும் வேளையில், இந்த தேர்தலில் ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ட தலைவர்களை பெற Influence செய்ய முயற்சி செய்து வருகிறது. இப்படி மட்டும் நடந்தால் இந்த தேர்தல் பாதிக்கு, பலவிமான மக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு நாம் இயங்க வேண்டியிருக்கும், அவர்கள் தொடர்ந்து அணுஆயுதம் கொண்டு இருப்பார்கள் என தெரிவித்துள்ளார் டிரம்ப்.
ஈரான் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தலைவர்கள் Influence செய்வதாக கூறுவதற்கு எவ்விதமான ஆதாரத்தையும் கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications
