அமெரிக்காவின் தீவிர வலதுசாரி அரசியல் ஆர்வலர் லாரா லூமர், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் பணிகளைத் தடுப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி, இந்திய ஐடி துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் துறையானது இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், அமெரிக்க நிறுவனங்களின் அவுட்சோர்சிங் ஒப்பந்தங்களை பெரிதும் சார்ந்துள்ளது.
கால் சென்டர்களை மீண்டும் அமெரிக்க மயமாக்குங்கள்: லாரா லூமர் தனது X பதிவில், ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க ஐடி நிறுவனங்கள் தங்கள் பணிகளை இந்திய நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்வதைத் தடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க வாடிக்கையாளர்கள் இனி கால் சென்டர்களை அழைக்கும் போது, ஆங்கிலத்தில் பேசுவதற்கு 'இரண்டு' என்ற எண்ணை அழுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கிண்டலாகத் தெரிவித்தார். அழைப்பு மையங்களை மீண்டும் அமெரிக்க மயமாக்குங்கள் (Make call centers American again) என்ற கோஷத்தையும் அவர் முன்வைத்தார்.
வர்த்தக ஆலோசகர்களின் ஆதரவு: அமெரிக்க ஆர்வலர் ஜாக் போசோபிக், அனைத்து வெளிநாட்டு தொலைதூரப் பணியாளர்களும் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்களும் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, போசோபிக்கின் பதிவை மீண்டும் வெளியிட்டதன் மூலம், இந்தக் கருத்தை ஆதரிப்பதாகத் தோன்றியது. இது கட்டண நேரம் என்று கூறிய நவரோ, இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்வது அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்பை ஒடுக்குவதற்கு பங்களிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.இந்த விவாதம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சிலர், இந்த நடவடிக்கையால் வேலைகள் அமெரிக்காவிற்குத் திரும்பாது, மாறாக அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலேயே தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைத்து, இன்னும் அதிக வளங்களை வெளிநாடுகளுக்கு நகர்த்தவே இது வழிவகுக்கும் என்று வாதிடுகின்றனர். மற்ற சிலர், அந்த வேலைகளை அமெரிக்கர்களுக்குக் கொடுங்கள்! என்று டிரம்ப்பின் முடிவை ஆதரிக்கின்றனர்.
மேலும், அழைப்பு மையங்கள் மட்டுமல்ல, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலேயே முழு வளர்ச்சி மையங்களையும் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டு, மலிவான உழைப்பு காரணமாகவே இத்தகைய அவுட்சோர்சிங் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
ஒருசிலர், "இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அமெரிக்க ஐடி ஊழியர்களுக்கு வேலைகள் கிடைக்கவில்லை என்று கூறி, டிரம்ப்பின் முடிவை வரவேற்றனர்.
இந்த விவகாரம், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான வர்த்தக உறவில் பதற்றத்தை அதிகரிப்பதுடன், இந்திய ஐடி துறையின் எதிர்காலம் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?



Click it and Unblock the Notifications