கடந்த 5 வருடத்தில் இந்தியாவில் பெரும் முதலீடுகளையும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிய ஒரு துறை என்றால் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறை தான். அதிலும் குறிப்பாக ஆப்பிள் ஐபோன் தயாரிப்பிலும் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் அதிகப்படியான முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் டிரம்ப் முக்கியமான எச்சரிக்கையை ஆப்பிள் நிறுவனத்திற்கும், அதன் சிஇஓ டிம் குக்கிற்கும் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் அமெரிக்காவில் விற்கப்பட வேண்டுமெனில், அவை அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனேவ ஆப்பிள் சிஇஓ டிம் குக்-யிடம் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப் தற்போது வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் ஐபோன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை டிம் குக்-யிடம் ஏற்கனவே தெரிவித்ததாகவும், இதைப் பின்பற்றாவிட்டால் குறைந்தபட்சம் 25% வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தற்போது எச்சரித்துள்ளார்.
இந்த அறிவிப்பை, டொனால்டு டிரம்பின் தனது சொந்த சமுக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவாக வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு ஆப்பிளின் முக்கிய உற்பத்தியாளரான பாக்ஸ்கான் இந்தியாவில் தனது முதலீட்டு வேகத்தை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கிறது.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் தற்போது அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்கவில்லை. அதன் பெரும்பாலான உற்பத்தி சீனாவில் நடைபெறுகிறது, மேலும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் ஐபோன்கள் (ஆப்பிளின் மொத்த உற்பத்தியில் 15%) தயாரிக்கப்படுகின்றன.
சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி முதலீட்டை செய்ய துவங்கியது இதுவும் டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் எடுக்கப்பட்டவை. ட்ரம்பின் இந்த அறிவிப்பு, ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தி சங்கிலியில் புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
டிரம்ப் அமெரிக்க நிறுவனங்களை உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியதுவம் அளிக்கவும், உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதை சாத்தியப்படுத்த வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது முதல் பல முட்டுக்கட்டைகளை தொடர்ந்து விதித்து வருகிறார் டிரம்ப்.
ஒரு வாரத்திற்கு முன்பு, டிரம்ப் டிம் குக்கை இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்தி, அமெரிக்காவில் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து தற்போது ஆப்பிள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது ஆப்பிளின் எதிர்காலம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் ஆப்பிளின் முதலீடும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் உற்பத்தி வசதிகள் இல்லாத நிலையில், இந்தியா மற்றும் சீனாவில் உள்ள உற்பத்தி மையங்களை அமெரிக்காவுக்கு மாற்றுவது மிகுந்த நிதி செலவுகளையும், நேரம் எடுக்கும் காரியமாகும். இதேபோல் இந்த வரி விதிப்பு எச்சரிக்கை உடன் சேர்த்து ஆப்பிள் ஐபோன்களின் விலையை உயர்த்த அதன் வர்த்தகத்தையும் மோசமாக பாதிக்கலாம். மேலும், இந்தியாவில் ஆப்பிளின் உற்பத்தி மையங்களுக்கு இது ஒரு பின்னடைவாக அமையலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications