அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றியே தீருவேன் என கூறி இரண்டு வாரங்களாக பெரிய சம்பவமே செய்துவிட்டார். கிரீன்லாந்தை வாங்குவதற்கு அந்த நாட்டு மக்களுக்கு பணம் கொடுக்கப்படும், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் , டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடுமையான இறக்குமதி வரி விதிக்கப்படும் என தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வந்தார்.
கடந்த ஒரு வார காலமாக இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்கா கிரீன்லாந்தை கட்டுக்குள் எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் வரி விதித்தால் பதிலுக்கு போட்டி வரி விதிப்போம் என அறிவித்தன. இதனால் உலக அளவில் வர்த்தக மோதலும் போர் பதற்றமும் உண்டானது. பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

இந்த சூழலில் திடீரென அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார். கிரீன்லாந்து விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்கப் போவதில்லை என தெரிவித்திருக்கும் அவர் வரி விதிக்கப்படும் என்ற மிரட்டலில் இருந்தும் பின்வாங்கி இருக்கிறார். உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதன் ஒரு பகுதியாக நேட்டோ கூட்டமைப்பின் செயலாளர் மார்க் ரூட்டை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் கிரீன்லாந்து விவகாரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்திருந்தேன் அதனை வாபஸ் பெறுகிறேன் என கூறியுள்ளார்.

நேட்டோ செயலாளர் மார்க் ரூட்டை சந்தித்து பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தேன். ஆக்கப்பூர்வமான முறையில் இந்த பேச்சுவார்த்தை இருந்தது எனக் கூறியிருக்கிறார். கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் போது அமெரிக்காவிற்கும் அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் மிகச் சிறந்த ஒரு ஒப்பந்தமாக இது இருக்கும் என தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விதிக்கப்படுவதாக அறிவித்திருந்த வரி விதிப்பு அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோர் தொடர்ந்து நடத்துவார்கள் என கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதான வரி விதிப்பு நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கியிருக்கும் டிரம்பின் நடவடிக்கைக்கு டென்மார்க் நாட்டு வெளியூர் துறை அமைச்சர் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இது ஒரு நேர்மறையான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் போட்டி வரி விதிக்கும் முடிவுகளை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிகிறது.
கிரீன்லாந்து விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை இல்லை, வரி விதிப்பும் இல்லை என்ற டிரம்பின் அறிவிப்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாக வர்த்தக மோதல் இருக்காது என்பதால் இனி முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளை நோக்கி வருவார்கள் எனவே தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளது.
More From GoodReturns

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications