அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்தியப் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% வரி விதிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய வரி விதிப்புக்கு முக்கியமான காரணம், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா இந்த வரியை விதித்துள்ளது. இதனால் இந்தியப் பொருட்களுக்கு இனி அமெரிக்க மண்ணில் மொத்தம் வரி 50% ஆக உயர உள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பதிலடி:
இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்ட வெளியுறவு அமைச்சகம் செய்திதொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அமெரிக்கா கடந்த சில நாட்களில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறிவைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை சந்தை சூழல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்வதாகவும், 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இதை செய்வதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனால், அமெரிக்கா இந்தியாவுக்கு மேலும் வரி விதிப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது, நியாயமற்றவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
ஏனெனில் பல நாடுகளும் தங்களின் தேசிய நலன்களுக்காக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செயல்படுகின்றன என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

எதிர் நடவடிக்கைகள்:
இந்தியா, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை எதிர்த்து, தனது தேசிய நலன்களை பாதுகாக்க அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அறிவித்துள்ளார் வெளியுறவு அமைச்சகம் செய்திதொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.
இந்த கூடுதல் வரி விதிப்பு உத்தரவு, கையெழுத்திடப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா மற்றும் ரஷ்யா, அமெரிக்க நிர்வாகத்துடன் இறக்குமதி வரி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கால அவகாசம் கிடைக்கும்.
இந்த பேச்சுவார்த்தைகள், வரி விதிப்பின் தாக்கத்தை குறைப்பதற்கு அல்லது மாற்று தீர்வுகளை காண்பதற்கு வழிவகுக்கலாம். இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவை, சரியானவை இல்லை மற்றும் காரணமற்றவை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய-அமெரிக்க வர்த்தக உறவு முக்கியமானதாக இருப்பதால், இந்த பதற்றத்தை தணிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!



Click it and Unblock the Notifications