அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த உலக நாடுகள் மீது விதித்த இறக்குமதி வரிகள், சட்டரீதியாக சவாலுக்கு உள்ளான நிலையில், வாஷிங்டனில் உள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வரிகளை மீண்டும் நடைமுறைப்படுத்த அனுமதி அளித்துள்ளது.
டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி சர்வதேச வர்த்தகத்திற்கு பெரும் தலைவலியாக இருந்த நிலையில், அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியா உட்பட பல நாடுகளுக்கு நம்மதியை அளித்தது. ஆனால் இந்த நிம்மதி 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், டிரம்ப் தனது அவசரகால அதிகாரங்களை மீறி இந்த வரிகளை விதித்ததாக முடிவு செய்து வரி விதிப்பை ரத்து செய்ய தீர்ப்பு அளித்தது. ஆனால் அடுத்த ஒரு நாளில் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் (federal appeals court) இந்த தீர்ப்புக்கு தற்காலிக இடைநிறுத்த உத்தரவை வெளியிட்டு உள்ளது.
இதனால், ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் "விடுதலை நாள்" என்ற பெயரில் அறிவித்த அனைத்து வரிகளும், அரசு மேல்முறையீடு செய்யும் வரை நடைமுறையில் இருக்கும். 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தை (IEEPA) அதிபர் டிரம்ப்-ம் டிரம்ப் நிர்வாகமும் தவறாகப் பயன்படுத்தியதாக வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
டொனால்ட் டிரம்ப் IEEPA சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, தேசிய அவசரநிலையை அறிவித்து, கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனைத்து வர்த்தக கூட்டாளி நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை விதித்ததை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தச் சட்டம் அவசர தேசிய அச்சுறுத்தல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, நீண்டகால வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்ய வரிகளை விதிக்க அனுமதிக்காது என்று தெளிவுப்படுத்தியது.
இந்தத் தீர்ப்பு, டிரம்பின் இறக்குமதி வரிகளை சட்டவிரோதமாகவும், சட்டத்திற்கு எதிராகவும் கொண்டு வரப்பட்டு உள்ளது என திட்டவட்டமாக அறிவித்தது. இந்த உத்தரவுக்கு தான் தற்போது வாஷிங்டனில் உள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் (US Court of Appeals for the Federal Circuit) தற்காலிக தடை உத்தரவை வழங்கியது.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications