அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வால் ஏற்றுமதியை சார்ந்து இருக்கும் நிறுவனங்களின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் அடுத்தடுத்து சரமாரியாக கோரிக்கை வைத்து வருகிறது.
சீனா பிளஸ் ஒன் கொள்கை மூலம் இந்திய நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகத்தை பெற்று வந்த நிலையில் தற்போது டிரம்ப்-ன் 50 சதவீத வரியால் மொத்தத்தையும் இழக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இந்த மோசமான சூழலில் ஏற்றுமதியாளர்கள் தங்கள் வணிகத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசிடம் இருந்தும், ரிசர்வ் வங்கியிடம் இருந்தும் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய தொழில்துறையின் கோரிக்கைப் பட்டியலில் முக்கியமானதாக இருப்பது ஏற்றுமதி நிறுவனங்கள் வாங்கிய கடன் திருப்பிச் செலுத்துவில் தளர்த்த வேண்டும் என்பது தான். இதை தொடர்ந்து ஏற்றுமதி பாதிக்கப்பட்ட துறை நிறுவனங்களுக்கு அரசு உத்தரவாதத்துடன் கடன்கள், வட்டி சலுகைகள், ஊழியர்களின் பிராவிடண்ட் ஃபண்ட் (பிஎஃப்) மற்றும் ஊழியர்கள் மாநில காப்பீட்டு கழகம் (ESIC) ஆகியவற்றுக்கு உதவி தேவை என தெரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் குறைந்த ஆர்டர்கள் மற்றும் நீண்ட கால தொகை செலுத்தல் சுழற்சியால் ஏற்படும் பணப்புழக்க பிரச்சினைகளை சமாளிக்க உதவும். இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) ஒரு ஆண்டு காலத்துக்கு முதல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்தலுக்கு இடைநிறுத்தம் கோரியுள்ளது. இது, புதிய சந்தைகளை விரிவுபடுத்தவும், வணிகத்தை மறுசீரமைக்கவும் வாய்ப்பளிக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.
கடனை திருப்பி செலுத்துவதில் கால அவகாசம்
நகைகள் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவர் கிரித் பான்சாலி, இந்த வரி உயர்வை ஒரு பூகம்பமாக குறிப்பிடுகிறார். இது தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும் என அவர் கூறியுள்ளார். பான்சாலி ஆர்பிஐ உடனான கூட்டத்தில் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் கடனை திருப்பி செலுத்துவதில் கால நீட்டிப்பு அளிக்கவும் வங்கிகளிடம் தளர்வு கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஒரு வருட விலக்கு
எஃப்ஐஇஓ தலைவர் எஸ்சி ரல்ஹான் கூறுகையில் இந்த 50 சதவீத வரியால் சில குறிப்பிட்ட துறையில் நிறுவன மூடல்கள் மற்றும் வேலைவாய்ப்பு இழப்பு போன்ற நெருக்கடியை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளார். அமெரிக்க சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்நாட்டு சந்தையில் விற்பது சாத்தியமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இத்தகைய மோசமான சூழ்நிலையை சமாளிக்க ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஒரு வருட காலத்திற்கு கடன் தொகை மற்றும் வட்டி தொகையை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications