சென்னை: அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை இந்தியாவை சேர்ந்த பல்வேறு துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது .
இதில் அதிக அளவு பாதிப்பை சந்தித்து இருப்பது தமிழ்நாட்டை சேர்ந்த தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் தான். அமெரிக்கா அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகளில் பணியாற்றும் 75 ஆயிரம் பேரின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக அளவில் தோல் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய தோல் பொருட்களில் 30 சதவீதம் அமெரிக்க சந்தையை நோக்கி தான் செல்கிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் 60% பொருட்களை அமெரிக்க சந்தையை இலக்காக வைத்து தான் உற்பத்தியையே மேற்கொள்கின்றன. அவற்றின் விற்பனையே அமெரிக்க சந்தையை சார்ந்து தான் இருக்கிறது .
அமெரிக்க அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது என கேஎச் ஷூஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அப்துல் வஹாப் தெரிவித்திருக்கிறார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டி அளித்துள்ள அவர் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சுமார் 20 சதவீதம் தள்ளுபடியில் பொருட்களை கேட்பதாகவும் கூடுதல் வரியால் ஏற்படக்கூடிய நிதிச் சுமையை ஏற்றுமதியாளர்களான எங்களை ஏற்க சொல்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு பிராண்டுகளும் புதிதாக எந்த ஆர்டரையும் தராமல் நிறுத்தி வைத்திருக்கின்றன என்றும் கூறுகிறார். இதனால் மூலப்பொருட்களை வாங்கி வைத்துவிட்டு நாங்கள் புதிய ஆர்டர்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டாகி விட்டது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சூழல்களில் தேசிய நலனை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம் அதே வேளையில் இந்த வரி விதிப்பு பிரச்சனையிலிருந்து மீண்டு வர அரசு எங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என வஹாப் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஃபரிதா பிரைம் டானரி நிறுவனத்தின் இஸ்ரார் அகமது அளித்த பேட்டியில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை விடுத்து வேறு நாடுகளின் உற்பத்தியாளர்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக நாங்கள் வேறு வழியில்லாமல் தள்ளுபடி விலையில் பொருட்களை அனுப்பி வருகிறோம் என கூறுகிறார். இதே நிலை நீடித்தால் எங்களின் தொழில்களே முற்றிலுமாக முடங்கும் சூழல் உண்டாகும் என குறிப்பிடுகிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications