அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் அமெரிக்கா மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கூட்டணியில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக செர்ஜியோ கோர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வில் பேசிய டொனால்ட் டிரம்ப், இந்த வர்த்தக ஒப்பந்தம் மிகவும் நேர்மையான ஒப்பந்தமாக இருக்கும் என்று உறுதியளித்தார். மேலும், இது இதற்கு முன்னர் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் இந்தியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கி வருகிறோம். இது முந்தைய காலங்களில் இருந்த ஒப்பந்தங்களை விட மிகவும் வித்தியாசமானது மற்றும் சிறப்பானது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் மிக முக்கியமான உறவு : அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்தியாவுடனான உறவு என்பது நம் நாட்டின் மிகவும் முக்கியமான சர்வதேச உறவுகளில் ஒன்று என்று டிரம்ப் வலியுறுத்தினார். இந்தப் புதிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில், புதிதாகப் பொறுப்பேற்கும் தூதர் செர்ஜியோ கோரின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இது ஒரு பெரிய விஷயம் என்று அழுத்தமாகக் கூறிய டிரம்ப், விரைவில் தாம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதை மீண்டும் சூசகமாக தெரிவித்தார்.
அதேபோல், இந்தியாவின் வியூக முக்கியத்துவம் மற்றும் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை பாராட்டிய அவர், இந்தியா, உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றிற்கு தாயகமாக இருப்பதுடன், மிக வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனக்கிருந்த தனிப்பட்ட நல்லுறவை பற்றி கூறிய அவர், பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு உள்ளது. அதை செர்ஜியோ, அவருடன் நட்பு பாராட்டுவதன் மூலம் மேலும் பலப்படுத்தி இருக்கிறார்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
ரஷ்ய எண்ணெய்க்கான வரி குறையும் : இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா விதித்த வர்த்தகத் தடைகள் குறித்துப் பேசியபோது, அந்த வரிகளைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். ரஷ்ய எண்ணெயை வாங்குவதால், இந்தியா மீது இப்போது அதிக வரிகள் உள்ளன. ஆனால், அவர்கள் இப்போது ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்வதை வெகுவாக குறைத்துள்ளனர். எனவே, நாங்கள் வரிகளை குறைக்கப் போகிறோம். ஒரு காலகட்டத்தில், நாங்கள் அவற்றைக் குறைத்துவிடுவோம்" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 50% வரை வரிகளை அமெரிக்கா விதித்திருந்தது. இந்தப் பிரச்சனை குறித்துப் பேசிய டிரம்ப், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறையும் என்று பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்ததாக கூறினார். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அல்லது பிற அரசுத் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications