அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட புதிய நிர்வாக உத்தரவின் மூலம், ரெசிப்பரோக்கல் வரிகளை விதிக்கும் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின்படி, அமெரிக்கா எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறதோ, அந்த நாடு அமெரிக்கப் பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவிலான வரியை அமெரிக்காவும் அந்நாட்டின் பொருட்களின் இறக்குமதிக்கும் விதிக்கும்.
இந்த புதிய கொள்கை உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியா போன்ற அதிக வரி விதிக்கும் நாடுகளை இது குறிவைக்கிறது.

டிரம்ப் கையெழுத்திட்ட புதிய நிர்வாக உத்தரவின்படி அமெரிக்கப் பொருட்கள் மீது எந்த நாடுகள் எவ்வளவு வரிகளை விதிக்கிறது, எந்த வகையிலான வர்த்தக தடைகளை விதித்துள்ளது என்பதை நாடு வாரியாக ஆய்வுகளைச் செய்ய இந்த உத்தரவு மூலம் அறிவுறுத்துள்ளார். இந்த ஆய்வை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திடும் போது "உலகில் வேறு எந்த நாட்டையும் விட இந்தியா அதிக வரிகளைக் கொண்டுள்ளது" என்று ராய்ட்டர்ஸ் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தக உறவில் இந்த கொள்கை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த உத்தரவு கையெழுத்திடப்பட்டு, வரி விதிப்பு குறித்துப் பேசியுள்ளார்.
உலக வர்த்தக அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி வரி விகிதம் 17% ஆகவும், அமெரிக்காவிற்கு சுமார் 3.3% ஆகவும் உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளது. வர்த்தக எடை அடிப்படையில், இந்தியாவின் வரி விதிப்பு விகிதம் சுமார் 12%, அமெரிக்காவின் விகிதம் 2.2% ஆகவும் உள்ளது. இந்த வேறுபாட்டின் காரணமாக, டிரம்ப் அரசின் இந்த ரெசிப்பரோக்கல் வரிகள் கொள்கை இந்தியாவை அதிகம் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்தியா தற்போது உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLI) மற்றும் விவசாயம் உட்பட பல்வேறு துறைகளுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. அமெரிக்காவின் ரெசிப்பரோக்கல் வரி கொள்கை அமலாக்கப்படும் பட்சத்தில், இந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பாதிக்கப்படலாம்.
இதன் விளைவாக, இந்தியாவும் அமெரிக்காவும் இடையிலான வர்த்தக உறவில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய அணுகுமுறை சர்வதேச வர்த்தகச் சூழலில் பெரும் சவாலாக உருவெடுக்கும். இந்தியா போன்ற நாடுகள் இந்த சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
More From GoodReturns

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications