அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட புதிய நிர்வாக உத்தரவின் மூலம், ரெசிப்பரோக்கல் வரிகளை விதிக்கும் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின்படி, அமெரிக்கா எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறதோ, அந்த நாடு அமெரிக்கப் பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவிலான வரியை அமெரிக்காவும் அந்நாட்டின் பொருட்களின் இறக்குமதிக்கும் விதிக்கும்.
இந்த புதிய கொள்கை உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியா போன்ற அதிக வரி விதிக்கும் நாடுகளை இது குறிவைக்கிறது.

டிரம்ப் கையெழுத்திட்ட புதிய நிர்வாக உத்தரவின்படி அமெரிக்கப் பொருட்கள் மீது எந்த நாடுகள் எவ்வளவு வரிகளை விதிக்கிறது, எந்த வகையிலான வர்த்தக தடைகளை விதித்துள்ளது என்பதை நாடு வாரியாக ஆய்வுகளைச் செய்ய இந்த உத்தரவு மூலம் அறிவுறுத்துள்ளார். இந்த ஆய்வை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திடும் போது "உலகில் வேறு எந்த நாட்டையும் விட இந்தியா அதிக வரிகளைக் கொண்டுள்ளது" என்று ராய்ட்டர்ஸ் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தக உறவில் இந்த கொள்கை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த உத்தரவு கையெழுத்திடப்பட்டு, வரி விதிப்பு குறித்துப் பேசியுள்ளார்.
உலக வர்த்தக அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி வரி விகிதம் 17% ஆகவும், அமெரிக்காவிற்கு சுமார் 3.3% ஆகவும் உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளது. வர்த்தக எடை அடிப்படையில், இந்தியாவின் வரி விதிப்பு விகிதம் சுமார் 12%, அமெரிக்காவின் விகிதம் 2.2% ஆகவும் உள்ளது. இந்த வேறுபாட்டின் காரணமாக, டிரம்ப் அரசின் இந்த ரெசிப்பரோக்கல் வரிகள் கொள்கை இந்தியாவை அதிகம் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்தியா தற்போது உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLI) மற்றும் விவசாயம் உட்பட பல்வேறு துறைகளுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. அமெரிக்காவின் ரெசிப்பரோக்கல் வரி கொள்கை அமலாக்கப்படும் பட்சத்தில், இந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பாதிக்கப்படலாம்.
இதன் விளைவாக, இந்தியாவும் அமெரிக்காவும் இடையிலான வர்த்தக உறவில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய அணுகுமுறை சர்வதேச வர்த்தகச் சூழலில் பெரும் சவாலாக உருவெடுக்கும். இந்தியா போன்ற நாடுகள் இந்த சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications