இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நிலையாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டிரம்ப் அரசு கனடா மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் போதே அடுத்த சில நாடுகள் பல நாடுகள் மீது வரி விதிக்கப்படலாம் என்ற அச்சம் இருந்து வந்தது.
இந்த நிலையில் அமெரிக்க அரசு ஒரு முக்கிய காரணத்தை முன்னிறுத்தி இந்தியா, பாகிஸ்தான் உட்பட 16 நாடுகளுக்கு நிலையான 10 சதவீத வரியை விதித்துள்ளது. சரி எதற்காக இந்த வரி..?

அமெரிக்கா ஜூன் மாதம் உலகில் பல நாடுகள் கட்டாய அல்லது அடிமை பணி முறையில் அமர்த்தப்பட்டும் ஊழியர்கள் முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை கட்டுப்படுத்த சர்வதேச விதிகளை முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியது. இதை முறையாக ஆய்வு செய்து வர்த்தக சட்டம் பிரிவு 301 கீழ் 12.5 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா அரசு கூறியிருந்தது.
இந்த அறிவிப்பை அடுத்த மத்திய அரசு தனது வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023ல் முக்கிய திருத்தமாக கட்டாய அல்லது அடிமை பணி முறையில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள் தயாரித்த பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முழு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆயினும் அமெரிக்கா தற்போது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, இலங்கை, பிரிட்டன் என 16 நாடுகள் மீது 10 சதவீத வரி விதிக்கப்பட உத்தரவிடப்பட்டு உள்ளது என வெள்ளிக்கிழமை வெளியான ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வரி மற்றும் விசாரணை துவங்கிய காலம் தான் மிக முக்கியமானது, டிரம்ப அரசு உலக நாடுகள் மீது அந்நாட்டின் வர்த்தக வித்தியாசம் அடிப்படையில் ரெசிப்ரோக்கல் வரி விதித்தது. இந்த வரியை அமெரிக்க நீதிமன்றம் முறையற்ற வரி எனவும், இதை உடனடியாக ரத்த செய்யவும், இவ்வரி மூலம் வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்தவும் டிரம்ப் அரசுக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து டிரம்ப் அரசு ரெசிப்ரோக்கல் வரியை முழுமையாக ரத்து செய்து அனைத்து நாடுகளுக்கும் ஜூலை 24 வரையில் 10 சதவீத வரி விதிக்கப்பட்டது. சரியாக இன்று ஜூலை 24, டிரம்ப் அரசு புதிய வழியை கண்டுப்பிடித்து 16 நாடுகள் மீது 10 சதவீத வரியை விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications