ஒரே போன் காலில் மனம் மாறிய டிரம்ப்..! இந்திய பொருட்களுக்கு இனி 18% மட்டுமே வரி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு ஒரு நற்செய்தியை தந்திருக்கிறார். இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைத்து முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது இந்தியாவில் ஜவுளி உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி, நகை மற்றும் நவரத்தினங்கள் உற்பத்தி என ஏற்றுமதி துறை சார்ந்த இயங்கக்கூடிய பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு , கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த 50 சதவீத வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது.

ஒரே போன் காலில் மனம் மாறிய டிரம்ப்..! இந்திய பொருட்களுக்கு இனி 18% மட்டுமே வரி..!

இந்த சூழலில் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க வேண்டும் என டிரம்ப் கூறினார். இந்தியாவும் படிப்படியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டது. இது ஒருபுறம் இருக்க இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தையும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 50 சதவீத வரிவிதிப்பை குறைக்கவும், இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதை சமூக வலைதளத்தில் அறிவித்திருக்கும் டிரம்ப் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறார். எனவே இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பை 18 சதவீதமாக குறைக்கிறோம் என அறிவித்துள்ளார். அது மட்டும் இன்றி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25% வரி முற்றிலும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இந்தியா இடையேயான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கர் அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியும் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். 140 கோடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தியா அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்க கூடிய இந்த ஒப்பந்தத்திற்கு தொழிலதிபர்கள், சந்தை நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள் பெரிய வரவேற்பை தெரிவித்துள்ளனர். இது வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி என குறிப்பிட்டுள்ளனர். இதனால் இருதரப்பு பொருளாதார உறவுகள் ஊக்கம் பெறும் என்றும் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை வலுப்படும் என்றும் தொழில்துறையினர் கூறுகின்றனர். பங்குச்சந்தையை பொறுத்தவரை இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பங்குச்சந்தை மீண்டு வருவதற்கு மிகச்சிறந்த ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருப்பதாக முதலீட்டு துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+