வளைகுடா நாடுகளில் நிலவும் அமெரிக்கா - ஈரான் மோதல் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சொந்த Truth Social என்ற சமுகவலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்து புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் மத்தியிலான சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள கடுமையான வார்த்தைகள், இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது. எற்கனவே டிரம்ப் கருத்துக்களை மொத்தமாக ஈரான் மறுத்து வரும் வேளையில், தற்போது ஈரான் ஒப்பந்தம் செய்துக்கொள்ள கெஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தைக்கு தீவிரமாக முன்வர வேண்டிய நிலைமையில் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். ராணுவ ரீதியாக ஈரான் பலவீனமடைந்துள்ளதாகவும், "மீண்டும் எழும் வாய்ப்பு இல்லை" என்ற கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
டிரம்ப் தனது பதிவில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், மிகவும் வித்தியாசமானவர்கள், விசித்திரமானவர்கள். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய பிச்சை எடுக்காத குறையாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ராணுவ ரீதியாக ஈரான் பலவீனமடைந்துள்ளதாகவும், மீண்டும் எழ வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
மேலும் ஈரான் அதிகாரிகள் வெளிப்படையாக "அமெரிக்காவின் முன்மொழிவை பரிசீலித்து வருகிறோம்" என்று கூறுவது தவறான நிலைப்பாடு என்றும், அவர்கள் உண்மையில் ஒப்பந்தம் செய்ய முனைவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
டிரம்ப் தனது பதிவில், ஈரான் உடனடியாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது அவசியம் என எச்சரித்துள்ளார். இல்லையெனில், பின்னர் திரும்ப முடியாத நிலை உருவாகும் என்றும், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா முன்வைத்துள்ள சமாதான திட்டத்திற்கான 15 பாயின்ட்களை ஈரான் எச்சரிக்கையுடன் அணுகி வரும் சூழலில், டிரம்பின் இந்த கருத்து பேச்சுவார்த்தை செயல்முறைக்கு புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும்.
அரசியல் வட்டாரங்களை பார்க்கும்போது, இந்த வகையான கடுமையான கருத்துகள் இரு தரப்புகளுக்கிடையேயான நம்பிக்கையை குறைத்து, சமாதான முயற்சிகளை தாமதப்படுத்தும் அபாயம் உள்ளது.
டிரம்பின் இந்த பதிவு, மத்திய கிழக்கில் நிலவும் நிலைமை இன்னும் உறுதியற்றதாக இருப்பதை காட்டுகிறது. சமாதானம் எட்டப்படுமா அல்லது மோதல் மேலும் தீவிரமாகுமா என்பது அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் மீது அமையும்.
More From GoodReturns

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!



Click it and Unblock the Notifications