அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டபடி, அந்நாட்டிற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகப்படியான வரி விகிதங்களை விதித்துள்ளார். இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசலை ஏற்படுத்தி மோசமான நிலைமைக்குத் தள்ளியுள்ளது.
டிரம்ப் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் வரியில் கிட்டத்தட்டப் பாதி அளவை மட்டுமே விதிக்கப்படுவதாக அறிவித்து இந்த ரெசிப்ரோக்கல் வரியை விதித்துள்ளார். இதன் அடிப்படையில் தான் இந்தியப் பொருட்களுக்கு 26% வரி விதிக்கும் இந்த முடிவை நேற்று வெளியிட்டார்.

உதாரணமாக இந்தியா அமெரிக்கப் பொருட்கள் மீது 52 சதவீதம் அளவிலான வரி விதிப்புகளை விதிப்பதாகவும், ஆனால் அமெரிக்கா இந்தியா மீது 26 சதவீத வரி மட்டுமே விதிப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த 52 சதவீத வரியை எப்படிக் கணக்கிடப்பட்டது என்பதை டிரம்ப் விளக்கம் அளிக்கவில்லை.
அமெரிக்கா அரசு இந்தியா மட்டும் அல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தைவான், வியட்நாம் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பிற முக்கிய அமெரிக்க வர்த்தக கூட்டணி நாடுகளுக்கு வரிகளை விதித்துள்ளது. குறிப்பாக, சீனா மிகவும் கடுமையான வரி விதிப்பை எதிர்கொள்கிறது, சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 67 சதவீதம் வரியை விதிப்பதாகவும், இதில் பாதி 34 சதவீதம் வரியை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
இந்த நிலையில் டிரம்ப் இந்தியா மீதான வரியை விதிக்கும் போதும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனக்கு இருக்கும் தனிப்பட்ட நட்புறவு இந்த வரி விதிப்பு முடிவில் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்று டிரம்ப் கூறினார். இந்நிலையில் இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்கவும், அல்லது பதிலடி வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளது.
இந்தியாவின் முயற்சிகள்: அமெரிக்க அரசு விதித்துள்ள இந்த வரிகள் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்கப் பின்னடைவாக உள்ளது, இதனால் புதிய வரிகளைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டிரம்ப் விதித்துள்ள வரியை திரும்ப பெறும் வகையில், இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரி தளர்வுகளைக் கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடியின் வாஷிங்டன் பயணத்தின் போது, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன. ஆனால், இந்த வரிகளின் அமலாக்கம், அமெரிக்காவின் அணுகுமுறையில் முக்கியமான மாற்றம் நடந்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால் இந்தியாவுக்குச் சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவது என்பது கிட்டத்தட்ட முடியாத நிலைக்கு வந்துள்ளது.
ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கு முன்பு அமெரிக்கா இந்திய பொருட்களுக்குச் சராசரியாக 3.3 சதவீத வரியை மட்டுமே விதிக்கிறது, ஆனால் இந்தியா 17 சதவீதம் வரியை விதிக்கிறது என வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக விதிக்கப்பட்ட வரிகள் இந்திய அரசு அமெரிக்கப் பொருட்கள் மீதானவரி விதிப்பு முறையில் கூடுதலான சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே இந்தியா அமெரிக்க அரசுடனான பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.
இந்திய அரசு தரப்பில் ஏற்கனவே அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு வரி குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், இதனுடன் பிற பொருட்கள் மீதான வரியைக் குறைக்க இருதரப்பு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியாவுக்குச் சாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று இந்திய அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
டிரம்ப்-ன் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க கடந்த சில வாரத்தில் இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 8500 தொழிற்துறை பொருட்கள், அமெரிக்க போர்பன் விஸ்கி, ஹார்லி டேவின்சன் பைக் ஆகியவற்றின் மீது வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவுக்கு நிதி ஆதாரம் கொடுக்க இந்தியா அமெரிக்கக் கச்சா எண்ணெய், எரிவாயு, பாதுகாப்புத் துறை கருவிகள், ஆயுதங்களை அதிகமாக வாங்கும் முடிவுக்கு வந்தது. ஆனாலும் டிரம்ப் 26 சதவீத ரெசிப்ரோக்கல் வரியை விதித்துள்ளார்.
அமெரிக்கா நேற்று அறிவித்துள்ள வரி விதிப்பில் அதிகப்படியான வரி சுமையை எதிர்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா, ஐரோப்பா, வியட்நாம், தைவான், ஜப்பான் ஆகியவை முதல் 5 இடத்தில் உள்ளது.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications