கிரிப்டோகரன்சி சந்தை திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெரும் உயர்வுடன் துவங்கியுள்ளது, கடந்த வாரம் முழுவதும் மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்த முன்னணி கிரிப்டோகரன்சி அனைத்தும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பிட்காயின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமானது, இதேபோல் மற்ற முன்னணி கிரிப்டோகரன்சியும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய அமெரிக்க மூலோபாய நாணய கையிருப்பில் கிரிப்டோகரன்சியும் சேர்க்கப்படும் என்று கூறிய காரணத்தால் சரிவில் இருந்து பல கிரிப்டோகரன்சிகளும் இன்று தடாலடியாக உயர துவங்கின. இந்த அறிவிப்பு, கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், டிஜிட்டல் சொத்துக்கள் குறித்த தனது ஜனவரி நிர்வாக உத்தரவை தொடர்ந்து அமெரிக்கா பிட்காயின், எத்தர், எக்ஸ்ஆர்பி, சோலானா மற்றும் கார்டானோ உள்ளிட்ட நாணயங்களின் கையிருப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார். இந்த நாணயங்களின் பெயர்கள் இதற்கு முன்பு வெளியிடப்படவில்லை, ஜனவரி மாத உத்தரவில் டிஜிட்டல் கரன்சிகளை மட்டுமே கையிருப்பில் சேர்ப்பதாக அறிவிக்கப்பட்டது.
டொனால்டு டிரம்ப்-ன் இந்த அறிவிப்பு, கிரிப்டோ சந்தையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, பிட்காயின் மற்றும் எத்தர் இந்த கையிருப்பில் பெரும் பகுதியை வகிக்கும் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டது, கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியது.
இந்த பதிவின் எதிரொலி உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினை 20% க்கும் அதிகமாக உயர்த்தியது, இதன் மூலம் நேற்று வரையில் சரிவில் தத்தளித்த பிட்காயின் 24 மணிநேரத்தில் 78,273 டாலரில் இருந்து 94,154 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதேபோல் எதர் 20 சதவீதம் உயர்ந்து $2,482 ஆக இருந்தது, எக்ஸ்ஆர்பி 38% ஆகவும், சோலானா 20% ஆகவும், கார்டானோ 78% ஆகவும் உயர்ந்தது. இந்த திடீர் உயர்வு, கிரிப்டோ சந்தையில் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்கியுள்ளது.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க அரசு நடத்தும் முதல் வெள்ளை மாளிகை கிரிப்டோ உச்சி மாநாடு வரையில் இந்த தடாலடி உயர்வு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த உச்சி மாநாடு, கிரிப்டோ சந்தையில் மேலும் பல மாற்றங்களை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வால் ஸ்ட்ரீட் வெள்ளிக்கிழமை உயர்ந்த நிலையில் முடிந்தாலும், என்விடியா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வீழ்ச்சி முதலீட்டாளர்களை பிட்காயின் பக்கம் திருப்பியுள்ளது. பிப்ரவரியில் பிட்காயின் 17% க்கும் அதிகமாக சரிந்ததை மறக்க கூடாது. ஜூன் 2022 க்குப் பிறகு பிட்காயின் அதன் மிகப்பெரிய மாதாந்திர வீழ்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோ ஆதாரவாளரான டொனால்டு டிரம்ப் ஆட்சியை பிடித்த போது ஜனவரி மாத தொடக்கத்தில் பிட்காயின் 105,000 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பின்பு, இந்த உச்ச விலையில் இருந்து மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications