அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H1-B விசா திட்டத்தை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது முந்தைய நிலைப்பாட்டிற்கு அந்தர் பல்டி அடித்துள்ளார். இது இந்திய டெக் ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது, ஆனால் இதே வேளையில் ஹெச்1பி விசா மீது விதிக்கப்பட்டு உள்ள 1 லட்சம் டாலர் கட்டணம் குறைக்கப்படுமா அல்லது நீக்கப்படுமான என்பது தெரியவில்லை.
செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பான டிரம்ப் உடனான ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில், பத்திரிக்கையானரா லாரா இங்க்ராம், H1-B விசாக்கள் அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைக்கலாம் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், இதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் திறமையான ஊழியர்களை வெளியே இருந்து கொண்டுவர வேண்டியது அவசியமானதாக உள்ளது" என்று கூறினார்.

அமெரிக்காவில் போதுமான திறமை உள்ளவர்கள் இல்லையா என்று லாரா கேட்டார், இதற்கு டிரம்ப் "உண்மையில் அமெரிக்காவில் போதுமான திறமையானவர்கள் இல்லை... சில திறமைகள் இங்கு இல்லை. மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வேலையில்லாதவர்களை எடுத்து நேரடியாக 'ஏவுகனைகளை தயாரிக்கும் குழுவில் வைத்துவிட முடியாது என்று டிரம்ப் உதாரணம் தந்தார்.
டிரம்ப்-ன் இந்த பேச்சு, அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப மற்றும் தொழிற்சாலைகளில் வெளிநாட்டு நிபுணர்களின் தேவையை டிரம்ப் நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளதை காட்டுகிறது. இதனால் ஹெச்1பி விசா திட்டத்தை டிரம்ப் அரசு கையாளும் முறை மாறுமா என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்துள்ளது. இதேபோல் 1 லட்சம் டாலர் கட்டணம் நீக்கப்படுமான என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டிரம்பின் இந்த பேட்டியில் செப்டம்பர் மாதத்தில் ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற சோதனை குறித்தும் பேசினார். ஜார்ஜியாவில் இருக்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மற்றும் எல்ஜி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனங்களின் பேட்டரி தொழிற்சாலையில், 300க்கும் மேற்பட்ட தென் கொரிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த சம்பவம், அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன துறையில் திறமை தட்டுப்பாடு இருப்பதையும், வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவையை காட்டுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட 300-400 ஊழியர்கள் பல ஆண்டுகளாக பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் பேட்டரி தயாரிப்பு என்பது எளிதானது இல்லை, கெமிக்கல் தாக்கம், விபத்து ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும் வேளையில் இத்தகைய துறையில் பணியாற்ற அனுபவம்மிக்க ஊழியர்கள் கட்டாயம் தேவை. இத்தகைய இடத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் மக்களை நேரடியாக பணியில் அமர்த்திவிட முடியாது என டிரம்ப் பேசினார்.
முன்பு டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்தும் நோக்கில், செப்டம்பரில் H1-B விசாவுக்கு 1 லட்சம் டாலர் (சுமார் 84 லட்சம் ரூபாய்) விண்ணப்பக் கட்டணம் விதிப்பதாக உத்தரவைப் பிறப்பித்தது. இது, அமெரிக்காவுக்கு வெளியே இருந்து வரும் திறமையான வெளிநாட்டினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
H1-B விசா, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாக இருக்கும், அதை மீண்டும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கலாம். இந்த திட்டம், அமெரிக்க நிறுவனங்களை தொடர்ந்து உலக நாடுகளில் போட்டிப்போட உதவுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications