அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா மீது தொடர்ந்து கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறார். ஏற்கனவே 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற மாபெரும் தடையை உருவாக்கியிருக்கும் வேளையில் அடித்தக்கட்ட கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
இன்று (செப்டம்பர் 23) டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, H-1B விசா தேர்வு செயல்முறையில் பெரும் மாற்றம் செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியான அறிவிப்பில் ஹெச்1பி விசா அளிக்கப்படும் விண்ணப்பத்தை தேர்வு செய்யும் தற்போதைய லாட்டரி முறையை மொத்தமாக கைவிட்டு, திறமை மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் விசாக்களை விநியோகிக்கும் புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம், அமெரிக்க தொழில்நுட்பத் துறையை அதிகம் சார்ந்துள்ள H-1B திட்டத்தின் மிக முக்கியமான சீர்திருத்தமாகக் பார்க்கப்படுகிறது.

H-1B விசா தேர்வு முறையில் புதிய மாற்றம்
H-1B விசா திட்டம், அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து திறமையான தொழிலாளர்களை ஈர்க்க உதவும் ஒரு முக்கியமான கருவி, ஆனால் ஆண்டுக்கு 85,000 விசாக்களுக்கான விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதால் லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படுகிறது.
இந்த புதிய தேர்வு முறை மூலம், விண்ணப்பங்கள் எண்ணிக்கை 85,000-ஐ தாண்டும் போது, அதிகப்படியான ஊதியம் செலுத்தும் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு அதிக மதிப்பளிக்கும் வகையில் தேர்வு முறை மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதீத திறமை கொண்டவர்கள் மற்றும் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுநே முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த மாற்றம், அமெரிக்க குடியேற்ற சேவைகள் (USCIS) மூலம் அமல்படுத்தப்படும் என்று பெடரல் ரெஜிஸ்டர் அறிவிப்பு தெரிவிக்கிறது. இது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறப்போகிறது.
டிரம்ப் அதிரடி நடவடிக்கை
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து டிரம்ப், குடியேற்ற விதிமுறைகளை சீர்திருத்தம் செய்வதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல்கட்டமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மக்களை வெளியேற்றும் கட்டுப்பாடுகளை விதித்த டிரம்ப் அரசு, அடுத்தக்கட்டமாக சட்டரப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் வருபவர்கள் அந்நாட்டு குடிமக்களின் நலனை பாதுக்காகும் முயற்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியர்களை அதிகம் பாதிக்கம் அமைந்துள்ளது வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!



Click it and Unblock the Notifications