துபாய்: தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகள் ,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதை நோக்கி புதிதாக ஒரு துணை நிறுவனத்தை அமைத்திருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கே என் ராதாகிருஷ்ணன் தங்களுடைய சர்வதேச தொழிலை விரிவாக்கம் செய்யும் நோக்கில் துபாயில் புதிதாக ஒரு மையத்தை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதை கண்டறிந்தே இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

துபாயில் அமைக்கப்படக்கூடிய இந்த அலுவலகமானது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் செயல்பாடுகளுக்கும், விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் உள்ளிட்டவற்றுக்கும் வாகனங்களின் உதிரி பாகங்களை விநியோகம் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி டிஎன்சிசி என்று நிறுவனத்தை துபாயில் தொடங்கியது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க சந்தையில் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் இந்த துணை நிறுவனம் மேற்கொள்ளும் என டிவிஎஸ் மோட்டார் கம்பெனி அப்போது அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக தான் தற்போது துபாயில் இந்த நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை நிறுவுகிறது. ஐரோப்பிய சந்தையில் கடந்த ஆண்டு முதல்முறையாக கால் பதித்தது. அங்கே செயல்பட்டு வரக்கூடிய எமில் பிரே என்ற நிறுவனத்தோடு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தங்களுடைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிடர், டிவிஎஸ் எக்ஸ், அப்பாச்சி உள்ளிட்ட வாகனங்கள் தற்போது ஐரோப்பிய சந்தைகளில் கிடைக்கின்றன.
டிவிஎஸ் நிறுவனம் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் தங்களுடைய வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் மூன்று இடங்களிலும் இந்தோனேசியாவில் ஒரு இடத்திலும் என மொத்தம் நான்கு இடங்களில் உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 25 சதவீதம் வாகன ஏற்றுமதிகள் மூலம் கிடைத்தது தெரியவந்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் முதல் 9 மாத காலத்தில் 1400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறது. இன்னும் 300 கோடி வரை அடுத்த 3 மாதங்களுக்குள் முதலீடு செய்ய இருப்பதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications