தமிழ்நாட்டில் இருந்து இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் பழம்பெரும் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் சிஇஓ-வான கே.என். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து இப்பதவியில் தற்போது டிவிஎஸ் சர்வதேசத் தலைவராகப் பணியாற்றி வரும் பெய்மன் கார்கர்-ஐ புதிய சிஇஓ-வாக நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பெய்மன் கார்கர் 2027 ஜனவரி 27 முதல் தனது சிஇஓ பதவி பொறுப்பை ஏற்றுக்கொண்டு முறையாக பணியை துவங்குவார். இதற்கிடையில் பொறுப்புகளை மாற்றும், நிர்வாக நடைமுறைகள் நடைபெறும். இதேவேளையில் பெய்மன் கார்கர் இப்பதவிக்கு வரும் வரையில் கே.என்.ராதாகிருஷ்ணன் அப்பதவியில் தொடர்வார்.

மேலும் கே.என்.ராதாகிருஷ்ணன் ஜூலை 2027-ல் நடைபெறவிருக்கும் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் வரை ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட இயக்குநராகப் பணியாற்றுவார். பெய்மன் கார்கர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார், வெறும் 1 வருடத்தில் இவரது தலைமையில் சர்வதேச வர்த்தகம் முக்கிய பங்களிப்பை கொடுக்க துவங்கியுள்ளது.
இதேவேளையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் அடித்தக்கட்ட வளர்ச்சி திட்டத்தில் வெளிநாட்டு வர்த்தகத்ததை மேம்படுத்துவதும், வெளிநாட்டுகளில் வாங்கிய பிராண்டுகளை பெரியளவில் விரிவாக்கம் செய்வது தான் முக்கிய இலக்காக இருந்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் தற்போது பெய்மன் கார்கர் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
டிசிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பணையில் சர்வதேச வர்த்தகம் என்பது 29 சதவீத பங்களிப்பை கொடுப்பதோடு, 33 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது.
பெய்மன் கார்கர் டிவிஎஸ் நிறுவனத்திற்கு முன்னர் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். ஆட்டோமொபைல் துறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.
டிவிஎல் நிறுவனத்திற்கு முன்பு Groupe Renault, ஜப்பான் நாட்டின் நிசான், இன்பினிட்டி மோட்டார் நிறுவனத்தில் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.


Click it and Unblock the Notifications