டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தில் ஏற்கனவே 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது மீதமுள்ள பங்குகளையும் கைப்பற்றி மொத்தமாக 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கு தயார் என்றும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 41-43 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்து டிவிட்டரை மொத்தமாகக் கைப்பற்ற திட்டமிடுகிறார் எலான் மஸ்க்..
ஆனால் இந்த அறிவிப்பு டிவிட்டர் ஊழியர்களை மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால்-ஐ கடுப்பாக்கியுள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்-இன் இந்த 41 பில்லியன் டாலர் ஆஃபர் குறித்து ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லர் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் ஊழியர்கள் மத்தியில் அதிகளவிலான சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
ஸ்லாக் விவாதம்
இதன் எதிரொலியாக டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் மத்தியில் மட்டுமே இயங்கும் நிறுவன சேட் சேவையான ஸ்லாக்-ல் பல கேள்விகளை இந்நிறுவன ஊழியர்கள் எழுப்பினர். இதில் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வான பராக் அகர்வால்.
டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால்
இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் நடந்த முக்கியமான கூட்டத்தில் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால், எலான் மஸ் கொடுத்த 41 பில்லியன் டாலர் ஆஃபர் கொடுத்துள்ளது மூலம் டிவிட்டர் பணயக் கைதி இல்லை. தற்போது நிறுவனத்தின் ஊழியராக அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
41 பில்லியன் டாலர்
தற்போது எலான் மஸ்க் கொடுத்துள்ள 41 பில்லியன் டாலர் அல்லது ஒரு பங்கு 54.20 டாலர் ஆஃபரை நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. டிவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு எது சிறந்ததோ, அதை நிர்வாகம் முடிவு செய்தும்.
எலான் மஸ்க் தான் பிரச்சனை
இதேபோல் ஊழியர்களின் கருத்தை முன்னிறுத்த நிர்வாகக் குழுவில் பங்குதாரர்கள் உள்ளனர் என்றும் பராக் அகர்வால் கூறியதாகத் தெரிகிறது.
பொதுவாக இதுப்போன்ற நிறுவன கைப்பற்றல் திட்டம் அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி பொங்கும், ஆனால் எலான் மஸ்க் என்பதால் மட்டுமே கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது.
சுதந்திர பேச்சு
எலான் மஸ்க்-ன் 43 பில்லியன் டாலர் அறிவிப்பும், சுதந்திர பேச்சு குறித்து அவருடைய நிலைப்பாடு, சமுக வலைத்தளத்தை மொத்தமாக மாற்ற உள்ளது என்றால் மிகையில்லை. தற்போது எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளைக் கைப்பற்றினால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றப்படும்.
டிவிட்டர் பங்குகள்
எலான் மஸ்க் அறிவிப்பு பின்பு டிவிட்டர் பங்குகள் 45.42 டாலரில் இருந்து 48.36 டாலர் வரையில் உயர்ந்தது, ஆனால் வர்த்தக முடிவில் 4.69 சதவீதம் சரிந்து 45.08 டாலராகச் சரிந்துள்ளது. இந்தக் கடுமையான சரிவுக்குப் பின் டிவிட்டர் ஊழியர்களின் சலசலப்பு முக்கியமானதாக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications