உலகின் முன்னணி சமூக ஊடக தளமான டிவிட்டரில் பொதுவாகவே 280 எழுத்துகள் கொண்ட பதிவை மட்டுமே செய்ய முடியும். இதனால் பலர் தாங்கள் சொல்ல வேண்டிய கருத்தைப் பல பதிவுகளாகவும் அல்லது கருத்துக்கள் அடங்கிய புகைப்படமாகவும் பதிவு செய்து வந்தனர்.
டிவிட்டர் உரிமையாளரில் துவங்கி, உயர் அதிகாரிகள் வரையில் பல மாற்றங்களை எதிர்கொண்டு வரும் டிவிட்டர் பதிவு செய்யும் முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 280 எழுத்துக்களில் இருந்து 2500 சொற்கள் கொண்ட கட்டுரை எழுதும் அளவிற்குப் பதிவின் நீளத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
இந்த புதிய மாற்றங்களை இரண்டு மாதங்களுக்கு கனடா, கானா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர்களின் ஒரு சிறிய குழுவை உள்ளடக்கி சோதனை செய்ய உள்ளது டிவிட்டர்.