TATA SONS: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சந்திரசேகரனுக்கு 5 ஆண்டு பதவி நீட்டிப்பு.. மீண்டும் Chairman பதவி..!

அடுத்தடுத்து பல்வேறு சிக்கலிலும், நெருக்கடியிலும் மாட்டிக்கொண்டு உள்ள டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் உயர்மட்ட நிர்வாக குழுவின் கூட்டம் இன்று நடந்த நிலையில், இக்கூட்டத்தில் பதவி நீட்டிப்பு வேண்டாம் என அறிவித்த என்.சந்திரசேகரனுக்கு நிர்வாக குழு 5 ஆண்டு எக்ஸிகியூட்டிவ் சேர்மன் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் நாமினேஷன் மற்றும் ரெமுனரேஷன் கமிட்டி ஐபிஓ, சார் ரத்தன் டாடா டிரஸ்ட் விவகாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மீண்டும் என்.சந்திரசேகரன் அவர்களுக்கு அப்பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டது.

TATA SONS: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சந்திரசேகரனுக்கு 5 ஆண்டு பதவி நீட்டிப்பு.. மீண்டும் Chairman பதவி..!

இதைத் தொடர்ந்து இன்று நடந்த கூட்டத்தில் சந்திரசேகரனின் பதவிக் காலம் பிப்ரவரி 2027 உடன் முடியும் நிலையில், அவருக்கு 5 ஆண்டு பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முடிவை எடுக்க முக்கியமான காரணம் டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக நிறுவனத்தையும், நிர்வாகத்தையும் தயார் செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டாடா குழுமத்தில் தற்போது 2 பெரும் பிரச்சனைகள் வெடித்துள்ளது.

முதலாவது டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்து எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் ஆர்பிஐ ரத்து செய்துள்ளதால் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. ஆனால் டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்திற்கு ஐபிஓ வெளியிட விருப்பம் இல்லை. இந்த நிலையில் சந்திரசேகரன் மீண்டும் சேர்மன் பதவிக்கு வந்திருக்கும் காரணத்தால் புதிய வழிகளை ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது விஷயம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 18.4 சதவீத பங்குகளை வைத்திருக்கும் எஸ்பி குரூப் தனது பங்குகளை விற்க கடும் முயற்சிகளைச் செய்து வருகிறது. இதையும் சந்திரசேகரன் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக தற்போது உள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் என்.சந்திரசேகரன் தொடர்ந்து தலைவராக இருக்க 4-1 வாக்குகள் கிடைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவரான நோயல் டாடா, சந்திரசேகரன் தலைவராகத் தொடர்வது குறித்த முடிவுக்கு எதிராக வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளார்.

சந்திரசேகரன் ஏற்கனவே பதவி நீட்டிப்பு வேண்டாம் எனக் கூறி தனது கடிதத்தைக் கொடுத்துள்ளார், அதை டாடா சன்ஸ் நிர்வாகமும் ஏற்றுக்கொண்டு உள்ளது, புதிய தலைவரைத் தேடும் பணிகளும் துவங்கியுள்ளது. இப்படியிருக்கையில் மீண்டும் அவரை பதவியில் அமரவைப்பது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு நோயல் டாடா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+