இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பது போலவே பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் என்ற பெயரில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணம் பிஎஸ்எல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கின.
இந்தியாவிலும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதமுள்ள பிஎஸ்எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

மீதமுள்ள பிஎஸ்எல் போட்டிகளை நடத்தி கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் பிஎஸ்எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு அனுமதி தராது என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்க எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லை என அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லை போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் பிஎஸ்எல் போட்டிகளை நடத்தாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தெற்காசிய நாடுகளை சேர்ந்த பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறார்கள் . தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவும் வேளையில் பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது அங்கே பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் அங்கே வசிக்கக்கூடிய வெளிநாட்டு மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதலுக்கு வழிவகுக்க வாய்ப்பு இருப்பதாகவும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் கருதுகிறதாம்.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதமுள்ள 8 பிஎஸ்எல் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டது. விரைவில் போட்டி நடத்தப்படும் தேதிகள் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இதனை ஏற்க மறுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் காலவரையின்றி போட்டியை நிறுத்தி வைக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் ஜம்முவின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications