ஈரான் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. ஈரான் தொடர்ச்சியாக தன்னுடைய அண்டை நாடுகளின் மீது இது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி பதில் தாக்குதல் நடத்திய வண்ணம் இருக்கிறது.
சவுதி, துபாய் ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், புகழ்பெற்ற கட்டிடங்கள் , அமெரிக்க தூதரகங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்துகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ஈரான் வீசக்கூடிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை அழித்து மக்களுக்கு பாதுகாப்பு தந்து வருகிறது. ஈரான் தாக்குதல் நடத்தினாலும் பொது மக்களுக்கோ மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கோ எந்த பாதிப்பும் இல்லாத வகையில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

தாக்குதல் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஈரோனின் தாக்குதல்களை வீடியோ எடுப்பது புகைப்படம் எடுப்பது , தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிடுவது , ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் சிதறி கிடப்பதை நேரில் சென்று பார்ப்பது, வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரக மக்கள் ஈரான் போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளைய தினம் ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல பஹ்ரைன், கத்தார் குவைத் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் மார்ச் 20 ஆம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த போருக்கு மத்தியில் இந்த பகுதிகளில் வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டிய சூழல் உண்டாகியிருக்கிறது. இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரக அரசு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திறந்த வெளியிடங்களில் தொழுகை நடத்த தடை விதித்துள்ளது.
ஈரான் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனவே ரம்ஜான் பண்டிகையின் போது திறந்தவெளி இடங்களில் தொழுகையில் ஈடுபடக்கூடாது என்றும் மசூதிகளுக்கு உள்ளே மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. துபாய் , அபுதாபி என அனைத்து பகுதிகளிலும் இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பாரம்பரியமாக தொழுகை நடைபெறும் இடங்களில் கூட இந்த ஆண்டு தொழுகை நடைபெறாது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகை என்றாலே துபாயில் களைக்கட்டும் பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகை நடத்துவார்கள். ஈரான் தாக்குதல் நீடிப்பதால் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது அரசு. எனவே துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் ரம்ஜான் பண்டிகை ஒட்டி திறந்த வெளியிடங்களில் தொழுகையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
More From GoodReturns

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

துபாய், அபுதாபி ஹோட்டல்களில் 70% தள்ளுபடி.. வெளிநாட்டு பயணிகள் வராத காரணத்தால்.. புது ஐடியா..!!

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!

ஈரான் போர்: டிரம்புக்கு குட்டு வைத்த நட்பு நாடுகள்; எங்கள கேட்டா போர் தொடுத்தீங்க என கேள்வி!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

டிரம்ப்-ன் ராஜதந்திரம்.. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் குட்நியூஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? – அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!



Click it and Unblock the Notifications

