துபாயில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு; ஈரான் போர் நீடிப்பதால் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஈரான் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. ஈரான் தொடர்ச்சியாக தன்னுடைய அண்டை நாடுகளின் மீது இது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி பதில் தாக்குதல் நடத்திய வண்ணம் இருக்கிறது.

சவுதி, துபாய் ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், புகழ்பெற்ற கட்டிடங்கள் , அமெரிக்க தூதரகங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்துகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ஈரான் வீசக்கூடிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை அழித்து மக்களுக்கு பாதுகாப்பு தந்து வருகிறது. ஈரான் தாக்குதல் நடத்தினாலும் பொது மக்களுக்கோ மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கோ எந்த பாதிப்பும் இல்லாத வகையில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

துபாயில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு; ஈரான் போர் நீடிப்பதால் முக்கிய அறிவிப்பு..!!

தாக்குதல் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஈரோனின் தாக்குதல்களை வீடியோ எடுப்பது புகைப்படம் எடுப்பது , தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிடுவது , ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் சிதறி கிடப்பதை நேரில் சென்று பார்ப்பது, வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரக மக்கள் ஈரான் போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளைய தினம் ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல பஹ்ரைன், கத்தார் குவைத் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் மார்ச் 20 ஆம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

Also Read

இந்த போருக்கு மத்தியில் இந்த பகுதிகளில் வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டிய சூழல் உண்டாகியிருக்கிறது. இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரக அரசு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திறந்த வெளியிடங்களில் தொழுகை நடத்த தடை விதித்துள்ளது.

ஈரான் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனவே ரம்ஜான் பண்டிகையின் போது திறந்தவெளி இடங்களில் தொழுகையில் ஈடுபடக்கூடாது என்றும் மசூதிகளுக்கு உள்ளே மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. துபாய் , அபுதாபி என அனைத்து பகுதிகளிலும் இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Recommended For You

பாரம்பரியமாக தொழுகை நடைபெறும் இடங்களில் கூட இந்த ஆண்டு தொழுகை நடைபெறாது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகை என்றாலே துபாயில் களைக்கட்டும் பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகை நடத்துவார்கள். ஈரான் தாக்குதல் நீடிப்பதால் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது அரசு. எனவே துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் ரம்ஜான் பண்டிகை ஒட்டி திறந்த வெளியிடங்களில் தொழுகையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+