ஏஐ தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்க்கையில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக மாறிவிட்டது. பல்வேறு வேலைகளிலும் நாம் தொடர்ச்சியாக ஏஐ பயன்படுத்த தொடங்கி விட்டோம். ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்யக் கூடிய வேலைகள் அனைத்துமே படிப்படியாக ஏஐ வசம் சென்ற வண்ணம் இருக்கின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தால் சாதாரண ஊழியர்களின் வேலை தான் பறிபோகிறது என்றால் இது தலைமை செயல் அதிகாரிகளை கூட விட்டு வைக்காது என்பது தற்போது நிரூபணம் ஆகியிருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற ஊபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டாரா கோஷ்ரோசாஹி தன்னுடைய நிறுவனத்தில் தன்னுடைய வேலைக்கு ஆபத்து வந்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஊபர் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய பொறியாளர்கள் டாராவை போலவே ஒரு ஏஐ குளோனை உருவாக்கி இருக்கிறார்களாம். இது தொடர்பாக ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பகிர்ந்து இருக்கும் இவர், ஏஐ தலைமை செயல் அதிகாரி வேலையை கூட விட்டு வைக்காது என குறிப்பிட்டு இருக்கிறார்.
தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய பொறியாளர்கள் தன்னை போல ஏஐ குளோனை உருவாக்கி அதற்கு டாரா ஏஐ என பெயர் சூட்டிருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். என்னை வேலையில் இருந்து நீக்குவதற்காக அதனை அவர்கள் உருவாக்கவில்லை அதற்கு மாறாக என்னிடம் ஒரு பிரசன்டேஷனை மேற்கொள்ள வேண்டும் அல்லது குறிப்பிட்ட விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்பதற்கு முன்பாக என்னுடைய ஏஐ குளோனிடம் அவர்கள் விவாதிப்பார்கள் என்கிறார்.
நான் எப்படி எல்லாம் கேள்வி கேட்பேன் எப்படியெல்லாம் எதிர்வினையாற்றுவேன் என்பதற்கெல்லாம் தயாராகி விட்டு என்னிடம் வருவதற்காக இந்த டாரா ஏஐ பயன்படுத்திக் கொள்கிறார்கள் என கூறியிருக்கிறார். இப்போது என்னுடைய வேலைக்கு ஆபத்து இல்லாததை போல தோன்றலாம் ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் இதுபோன்ற ஏஐ கருவிகள் தலைமை செயல் அதிகாரி போன்ற மூத்த பதவிகளையும் விட்டு வைக்காது எனக் கூறியிருக்கிறார்.
நாம் அனைவருமே ஏஐ-ஆல் வேலை இழக்க போகிறோம் என குறிப்பிட்டு இருக்கிறார். பல்வேறு நிறுவன தலைவர்களும் கூட இதே கருத்தினை இதற்கு முன்பு முன் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் நடந்த ஏஐ உச்சி மாநாடு கலந்து கொண்ட ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், என்னுடைய தலைமை செயல் அதிகாரி வேலையை என்னை விட சிறப்பாக செய்யும் திறன் கொண்டதாக ஏஐ மாறிவிட்டது எனக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் கூட எந்த வேலைக்கும் ஏஐ இடம் இருந்து பாதுகாப்பு கிடையாது என்னுடைய வேலையை கூட கூடிய விரைவில் எடுத்துக் கொள்ளலாம் என்றார். தலைமை செயல் அதிகாரி பதவிக்கு இருக்கக் கூடிய பொறுப்புகளை மனிதர்களுடைய திறமையாக ஏஐ செய்து முடித்து விடும் என அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ் திடீர் ராஜினாமா.. கண்ட்ரோல்-ஐ கையில் எடுக்கும் ராகுல் பாடியா..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications