இந்திய ஐடி ஊழியர்களை கொத்துக் கொத்தாக அள்ளும் அமெரிக்க நிறுவனம்..! #UBER

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் தனது டெக் தளத்தை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றும் அளவிற்குத் தொடர்ந்து தனது இந்திய அலுவலகத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஊழியர்களை அதிகளவில் பணியில் அமர்த்துவது வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், உபர் இந்திய ஊழியர்களை அதிகப் பயணியில் அமர்த்த வேண்டும் என்பதற்காகப் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய அலுவலகத்தை அமைத்து டெக் மற்றும் பிராடெக் பணிகளைச் செய்து வருகிறது.

உபர் நிறுவனம்

உபர் நிறுவனம்

புதன்கிழமை உபர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்தியாவில் புதிதாக 250 இன்ஜினியர்கள் ஊழியர்களைப் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அலுவலகத்தில் பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து உபர் நிறுவனம் தனது வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் தேவையான இன்ஜினியரிங் மற்றும் பிராடெக் பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உபர் டெக் தளம்

இந்தியாவில் உபர் டெக் தளம்

உபர் நிறுவனம் தனது டெக் தளத்தை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற மிக முக்கியமான காரணம் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான திட்டங்களை மேம்படுத்துதல், அதேவேளையில் செலவுகளை அதிகளவில் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை கையில் எடுத்தது.

முக்கியப் பிரிவுகளுக்கு இந்தியர்கள் சேவை
 

முக்கியப் பிரிவுகளுக்கு இந்தியர்கள் சேவை

இதன் படி தற்போது இந்திய அலுவலகத்தில் இருந்த உபர் நிறுவனத்தின் பயணி மற்றும் ஓட்டுனர் வளர்ச்சி, டெலிவரி, உபர் ஈட்ஸ், டிஜிட்டல் பேமெண்ட், மார்கெட் பிளேஸ், ஆபத்து மற்றும் இணக்கம், வாடிக்கையாளர் ஆவேசம், இன்பரா, விளம்பர தொழில்நுட்பம், டேட்டா, பாதுகாப்பு மற்றும் நிதியியல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் அணிகளை அமைத்து பணியாற்றி வருகிறது.

10000 நகரங்கள் இலக்கு

10000 நகரங்கள் இலக்கு

இதேபோல் உபர் தனது டாக்ஸி, டெலிவரி சேவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள உள்ளது. குறிப்பாக அடுத்த சில வருடத்தில் உலகில் 10000 நகரங்களைத் தனது நெட்வொர்க் கீழ் இணைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மணிகண்டன் தங்கரத்தினம் - உபர் உயர் அதிகாரி

மணிகண்டன் தங்கரத்தினம் - உபர் உயர் அதிகாரி

இதுக்குறித்து உபர் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவின் உயர் தலைவர் மணிகண்டன் தங்கரத்தினம் கூறுகையில் உலக நாடுகளில் அளிக்கப்பட்டும் சேவைகள் தற்போது பெங்களூர் மற்றும் ஹைதரபாத் அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் இறுதிக்குள் உபர் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uber plans expansion in India, to hire about 250 engineers in tech, product

Uber plans expansion in India, to hire about 250 engineers in tech, product
Story first published: Friday, June 11, 2021, 16:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X