கொல்கத்தா: விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து பயணிகளிடம் இருந்து புகார் வந்த வண்ணம் இருக்கிறது. ஒரு காபியின் விலை 200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதால் விமான பயணிகள் , விமான நிலையங்களில் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உதான் யாத்ரி கஃபே என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை விமான நிலையங்களில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி கடந்த டிசம்பர் மாதம் முதன்முறையாக கொல்கத்தாவில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபே என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது. இங்கே ஒரு டீயின் விலை 10 ரூபாய் தான்.

இந்த உணவகம் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகி இருக்கும் நிலையில் விமான பயணிகளின் பிடித்தமான உணவகமாக இது மாறி இருக்கிறது என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நாள்தோறும் இந்த கடைக்கு சராசரியாக 900 பேர் வருகை தருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த டிசம்பர் 21ஆம் தேதியிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி வரை இந்த மலிவு விலை உணவகத்திற்கு 27,000 பேர் வந்து சென்றுள்ளனர் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவிக்கிறது.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராமமோகன் நாயுடு மலிவு விலை உணவகத்தை கொல்கத்தா விமான நிலையத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திறந்து வைத்தார். அப்போது அவர் "நான் விமான போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவில் விமான போக்குவரத்து மலிவானதாக மாற வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக தான் உதான் யாத்ரி கஃபே திட்டத்தை தொடங்கி இருக்கிறேன்" என கூறினார்.
கொல்கத்தா விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் பலரும் இந்த மலிவு விலை உணவகம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர் என அமைச்சர் ராம மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ள மலிவு விலை உணவகம் வெற்றியடைந்திருப்பதால் இனி நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் உதான் யாத்ரி கஃபே கடைகள் விரிவாக்கம் செய்யப்படும் என நம்பப்படுகிறது.
முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில் சுமார் 60 சதவீத விமான பயணிகள் விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை ரயில் நிலையங்களுடன் ஒப்பிடும்போது 100 முதல் 200% வரை உயர்வாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications